Connect with us

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது மாநில ஒழிப்புத் திட்டத்தின் ஒரே இலக்கு?!!

ration-card-istock

இந்திய அரசியல்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது மாநில ஒழிப்புத் திட்டத்தின் ஒரே இலக்கு?!!

மாநிலங்களை இல்லாமல் ஆக்க முடியாது. ஆனால் செல்லாதது ஆக்கி விட முடியும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது பாஜக வின் மத்திய அரசு.

முடிந்த வரை மாநிலங்களை வெறும் பொம்மை அமைப்புகள் ஆக்குவதன் மூலம் வலுவான் மத்திய அரசை அமைத்து அங்கு மேல்சாதி ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அந்த நோக்கில்தான் பாஜக அரசின் அனைத்து திட்டங்களும் வடிவமைக்கப் படுகின்றன.

இல்லாவிட்டால் இப்போது நாடு முழுமைக்கும் ஒரே ரேஷன் கார்டு வேண்டும் என்று  யார் அழுதார்கள்? எந்த அமைப்பு கோரிக்கை வைத்தது? அல்லது எந்த தனி மனிதர்தான் கோரினார்?

எப்படிஎல்லாம் மாநில உரிமைகளை பறிப்பது என்பது ஒன்றே அவர்களது  குறிக்கோளாக இருக்கிறது.

நாடு முழுக்க சுமார் 81கோடிப்பேர் மானிய விலையில் உணவு தானிய பொருட்களைப் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இந்திய உணவுக கழகம்  மத்திய உணவுக கழகம், மற்றும் தனியார் உணவுக கழகங்களின் கிட்டங்கிகளில் சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பு வைக்கப் பட்டுள்ளன.

இதற்கென அனைத்து தகவல் களையும் தொழில்நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கூறுகிறார்கள்.

தொழில் நுட்ப தகவல்களை ஒருங்கிணைக்க ஒரே ரேஷன் கார்டு தேவையில்லையே?  மாநிலங்களிடம் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்தால் போதுமே? அல்லது மாநிலங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் கொடுத்து அவற்றை ஒருங்கிணைக்க முடியுமே? எதற்கு மாநிலங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறீர்கள்?

நாங்கள் மானியம் கொடுக்கிறோம் அதனால் எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறீர்களா? நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மானியத் துகையிலும் மாநிலங்களின் பங்கும் இருக்கிறது!! எங்கள் பணத்தை எங்களுக்கே திருப்பி கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான்!

ஆந்திரா குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா ,திரிபுரா ஆகிய பத்து மாநிலங்களில் போது விநியாக திட்டங்களின் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வசதிகள் உள்ளதாம்.

எனவே இன்னும் ஓராண்டுக்குள் அதாவது ஜூன் 30, 2020 க்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ‘கெடு’ விதித்திருப்பதாக வந்திருக்கும் செய்திதான் அதிர்ச்சி அளிக்கிறது.

நமது உரிமைப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை நம்மிடீமிருந்து பறிக்க கெடுவிதிக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.?

மாநில அரசு நினைத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்ற மறுக்க முடியும்?

ஆனால் இந்த ஆமாம்சாமி அரசு எதிர்க்குமா? அல்லது தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுமா?

மாநில அரசின் கட்டுப்பாட்டில்  இருக்கும்போதே பொது மக்கள் அட்டையில் மாற்றங்கள் செய்யவும் புது அட்டை பெறவும் அல்லாடுகிறரர்கள். அகில இந்திய கட்டுப்பாட்டுக்குள் சென்றால்?

பிற மாநில மக்களுக்கு உதவுமாம்?  ஏன் அவர்கள் இங்கே பதிவு செய்து  கொண்டு வாங்க விதிமுறைகளை உருவாக்குங்கள். அல்லது அந்த  கார்டுகளுக்கு இங்கே பொருட்கள்  பெற ஒரு வழிமுறைகளை வகுங்கள்.

குடும்ப அட்டையில் இந்தியை இடம்பெற செய்ய இது ஒரு வழியாக கூட பாஜக அரசு திட்டமிடலாம். 

எந்த நியாயமும் இந்த திட்டத்தில் இல்லை.

எதுவாக இருந்தாலும் அமுலில்  இருக்கும் மாநில திட்டத்தில் சேர்த்துக் கொள்வது மட்டுமே ஒரே  தீர்வு!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top