Connect with us

திருமலையில் வேற்று மதத்தவர் வேலை செய்யக் கூடாதாம்?!

jegan-mohan-reddy

மதம்

திருமலையில் வேற்று மதத்தவர் வேலை செய்யக் கூடாதாம்?!

திருப்பதி தேவஸ்தானத்தில் சுமார் 48 பேர் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் பணி விலக வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு உத்தரவிட்டுள்ளது.

எந்த மதத்தில் இருப்பது அவரவர் விருப்பம். ஆனால் அவர்கள் இந்துக் கோவில்களில் பணிபுரிந்தால் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டுமா?

திருமலையில் மதமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் அதை  தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரி வருகிறது.

அவர்கள் பணியில் சேர்ந்தபோது இந்துக்கள் என்று சொல்லி சேர்ந்தார்களா? அல்லது பணியில் சேர்ந்த பிறகு மதம் மாறினர்களா?

செய்யும் பணிக்கும் நம்பும் மதத்திற்கும் என்ன தொடர்பு?

அவர்கள் இறைப்பபணிக்காக என்று சொல்லி சேர்ந்தால் அவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் மத நம்பிக்கை சாராத பணிகளுக்கு வேற்று மதத்தவர் பணியில் இருக்க என்ன தடை.?

சர்ச்சுகளில் மசூதிகளில் வேற்று மதத்தவர் பணி புரிகிறார்களா என்பது முக்கிய கேள்வி.

பிற மதங்களில் வேற்று மத நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை.

ஆனால் இந்து மதத்தில் மட்டும் நாத்திகம் பேசுகிறவர்கள் கூட இந்துக்கள் தான்.

ஜெகன் மோகன் ரெட்டி கூட கிறிஸ்தவர்தான். சமீபத்தில் குடும்பத்துடன் இஸ்ரேல் சென்று வந்தார். அவர் அவ்வப்போது ஏழுமலையான் கோவிலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்.

எனவே பிற மதங்களில் இல்லாத சுதந்திரம் இங்கு இருக்கிறது என்பதே நமக்கு பெருமை. அதை ஏன் இழக்க வேண்டும்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top