இந்திய அரசியல்

ஏழைகளுக்கு மாதம் ரூபாய் 6,000 தருவோம் என ராகுல் சொல்வது நடக்குமா?

Share

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடி குடும்பங்கள் அதாவது 25 கோடி மக்கள் பயனடையும் வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72,000/- அதாவது மாதம் ரூபாய் 6,000/- கொடுத்து குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

முடியுமா என்பது பெரிய கேள்வி. பிரதமர் மோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000/- கொடுப்போம் என்று அறிவித்ததை ஒட்டி காங்கிரசின் உறுதிமொழியாக நாங்கள் ஆண்டுக்கு  ரூபாய் 72,000/- தருவோம் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது .

3.6 லட்சம் கோடி செலவு  அல்லது உள்நாட்டு உத்தேச மொத்த உற்பத்தியில் 1.88%  அல்லது ஆண்டின் மொத்த வரி வருவாயில் 24% அல்லது உத்தேச குறைந்த பட்ச வருவாயில் இது இந்தியாவின் தனி நபர் வருவாயாக  57% என்று மதிப் பிடப்பட்டிருகிறது.

ஏறத்தாழ 950 மத்திய அரசின் நலத்திட்டங்களில்  11 மட்டுமே  50% நிதிநிலை ஒதுக்கீட்டை பெறுகின்றன என்றும் மற்ற 939  திட்டங்களும் மறு  மதிப்பீடு செய்யப் பட வேண்டும் என்றும் கூறப் படுகிறது.

படிப்படியாக இது அமுல்படுத்தப் படும் என்று  கூறினாலும் இது சாத்தியக் கூறா அல்லது  முடியாததா என்பது பற்றி விவாதங்கள் நடக்கின்றன.

ப.சிதம்பரத்தின் உத்தி இது என கருதப்படுகிறது. அதை உறுதி படுத்தும் வகையில்  சென்னையில்  இன்று ப சிதம்பரம் இது எப்படி சாத்தியம் என விளக்கி பேட்டி கொடுத்தார்.

இந்திரா காலத்தில் ஏழ்மையை ஒழிப்போம், Garibi Hatao என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். வென்றார். ஆனால் வறுமைதான் ஒழியவில்லை.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு அரசு நிதி  உதவி செய்வது அவசியம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.

பிரதமர் அறிவித்தால் முடியும் எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தால் முடியாதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆக ஏழைகளை அந்த நிலையிலேயே வைத்துக்கொண்டு இனி ஆட்சிக்கு வரமுடியாது  என்ற உணர்வு ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும்  வந்திருப்பது நல்லதே.

முடியுமா முடியாது என்பதை தாண்டி மக்கள் நிச்சயம் இந்த அறிவிப்பால் ஈர்க்கப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

This website uses cookies.