Connect with us

தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்க விரும்பவில்லையோ பிரதமர் மோடி? விளக்கம் இல்லையே ஏன்?

modi

மொழி

தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்க விரும்பவில்லையோ பிரதமர் மோடி? விளக்கம் இல்லையே ஏன்?

எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் மோடிஅடிக்கல் நாட்ட வந்தபோது நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை. நிகழ்ச்சி முடித்த பின் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

தமிழத்தாய் வாழ்த்தை கேட்க பிரதமர் மோடி விரும்பவில்லையோ?

இதைப்பற்றி பல விமர்சனங்கள் எழும்பியும் தமிழக அரசிடம் இருந்தோ அதிகாரிகளிடம் இருந்தோ விளக்கம் ஏதும் வந்ததாக தெரியவில்லை. ஏன் இந்த மௌனம்?

ஒரு மொழிக்கு வாழ்த்தா? அதுவும் அந்த பாடலில் திராவிட நல் திருநாடும் என்று வேறு வரிகள் இருக்கின்றன. அது மோடியை உறுத்தும் என்று நினைத்து இருப்பார்களோ?

ஏற்கெனெவே ஜன கன மன பாடலுக்குப் பதிலாக வந்தேமாதரம் பாடலை கொண்டுவர வேண்டும் என்பதில்  ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது. சங்க சேவகர் மோடிக்கு நன்றாக  தெரியும்.

அதிலும் திராவிட உத்கல வங்கா என்று வரிகள் வரும். அதுவும் ஆகாது.                                 தமிழ்த்தாய் வாழ்த்தை  பாடாமல் தேசிய கீதத்தை மட்டும்  இசைத்தால் பிரச்னை வரும் என்பதால் இரண்டையும்  நிறுத்தி விட்டார்கள். 

இதுதான் பாரதீய பிராண்டு தேச பக்தி. ??!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in மொழி

To Top