Connect with us

குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பெயர்கள் இல்லை.??!!

vijayabaskar

சட்டம்

குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பெயர்கள் இல்லை.??!!

பெரிதாக பேசப்பட்ட குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் , டிஜிபி.ராஜேந்திரன் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்  துணை கண்காணிப்பாளர் மன்னர் மன்னன் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.

நாற்பது இடங்களில் சோதனை நடந்தது. மாநில காவல் துறையான டிவிஏசி  விசாரணை நடத்தினால் உண்மை வெளி வராது என்றுதான் உயர்நீதி மன்றம் சி பி ஐ விசாரனைக்கு உத்தரவிட்டது.

இப்போது குட்கா வியாபாரி மாதவராவ், சீனிவாசராவ் ,உமாசங்கர்குப்தா ,கலால் வரித்துறை  அதிகாரி பாண்டியன் , உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ,சிவகுமார் ஆகிய ஆறு பேர் மட்டும் கைது செய்யப் பட்டு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளனர்.

கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப் பட்ட ஊழல் புகாரில் கைப்பற்றப் பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்று குறிக்கப் பட்டு விசாரணை துவங்கியது. அதில் கண்ட பெரிய மனிதர்களின் பெயர்கள் தான் அப்போது மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறகு என்ன நடந்தது? சிபிஐ தலைமையிலேயே பெரிய அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.  அதனால் இன்று இருக்கும் சிபி ஐ தலைவரால் எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதற்குள் இப்படி அரைகுறையாக முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் இறுதியானது என்கிறார்களா? அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஏமாற்றம்.

சாட்சியங்கள் அடிப்படையில் தான் வழக்குப்புனைய முடியும். அந்த வகையில் சி பி ஐ எவரையும் தப்ப விடாது என்று நம்புவோம். நீதிமன்ற தலையீட்டில் நடைபெறும் வழக்கு இது என்பதால் தவறு நிகழ இடம் தர மாட்டார்கள் எனவும் நம்புவோம்.

ஆனால் நடப்பவைகள் அந்த நம்பிக்கையை தோற்றுவிப்பவையாக தோன்றவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top