மதம்

மீலாது நபி திருநாள் சிந்தனைகள்!!!!

Share

இன்று மீலாது திருநாள். அதாவது நபிகள் நாயகம் பிறந்த நாள்.

ஏசு கிறிஸ்து பிறந்து 571 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்.

முகம்மது பிறந்த மதம் இஸ்லாம் இல்லை.

ஆதாம், இப்ராஹீம், மோசஸ், ஜீசஸ், வழியில் முகம்மதுவும் ஒரு தூதர். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இறுதித் தூதர்.

முரட்டு அரபு குரைஷி வம்சத்தை சேர்ந்தவர்.  அந்த மக்களுக்கு நல்வழி காட்ட இறைவனால் அனுப்பப்  பட்ட இறுதி  தூதர்.

நாற்பது வயது வரையில் கல்வி கற்காமல் இருந்தவரை இறைவன் தூதராக தேர்ந்தெடுத்து அவருக்கு மறையை  ஓதியது அவன் கருணை.

எந்த மதமும் மக்களை வாழ வைக்கத்தான் பிறந்தன. ஆனால் பிறந்த பின் அந்த மதங்கள் மக்களை வாழ வைக்கிறதா? அழிக்கிறதா?

அன்பையும், அறத்தையும் போதித்த இறைவன் வன்முறையை அறிவுறுத்தி இருப்பானா?

இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்காத ஒன்றை அவன் பெயராலேயே செய்கிறார்களே அவர்கள் அந்த இறைவனின் பெயரை சொல்ல தகுதி படைத்தவர்களா?

எந்த முஸ்லிமும் ஐம்பெருங் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதி பூண்டால் மட்டும் போதாது.

இஸ்லாத்துக்கு எதிரான எதை செய்தாலும் இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பான்.  அதுவும் இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யும் கொலைகளை, அழிவுகளை , கொடுமைகளை நினைத்ததுதான் இந்த சிந்தனை.

ரமலான் மாதத்தில்  போரிடுகிறார்கள், மசூதிக்குள் வெடிகுண்டு வைத்து கொல்கிறார்கள், முஸ்லிம்கள் ஒருவர்க்கொருவர் கொன்று குவித்துக்கொள்கிரார்கள் இதெல்லாம் இஸ்லாத்துக்கு ஒப்புமை  உடையதா?

ஏக இறைவனை நம்புகிறவர்கள் அவர்களுக்குள்  புகுந்து  விட்ட பல பிரிவுகள் தங்களுக்குள் சண்டை இடாமல் வாழவே முடியாதா?

முஸ்லிம்கள் சுய  பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நாள் இந்த நன்னாள்.

இறைவன் அவர்களுக்கு நற்சிந்தனையை அருள்வானாக!!!!

This website uses cookies.