மதம்

குப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்??!!

Share

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப் பட்டதாக சொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருள்மிகு மனோன்மணி அம்மன் கோவில் மரகத லிங்கம் பல கோடி ரூபாய் மதிப்புடையது. அத்துடன் வெள்ளி பொருட்களும் திருடுபோனதாம். சுவற்றில் துளை  போட்டு நடந்த கொள்ளை அது.

ஜமீன்தார் மகேந்திர பந்தாரியர் கொடுத்த புகாரை காவல் துறை விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிலை கடத்தல் பிரிவுக்கு மாற்றப் பட்டது.

இந்நிலையில் ஜமீன் வளாகத்தில் குப்பையில் கொள்ளை போன மரகதலிங்கம் கிடைத்ததாக போலீசார் தெரிவித்து அதை குருக்கள் உறுதிபடுத்தியவுடன் சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது

மாட்டிக்கொள்வோம்  என்று தெரிந்து வீசிவிட்டுச் சென்ற அந்த திருடர்களை விரைவில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் கண்டு பிடித்து சொல்வார்கள் தண்டனை பெற்று தருவார்கள் என்றும் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

விலை மதிப்புள்ள சிலைகளை பாதுகாப்புடன் வைக்கக் கூட அற நிலையதுறைக்கு வக்கில்லையா??!!

This website uses cookies.