Connect with us

வைரமுத்துவின் கம்பீரமும் பார்ப்பனர்களின் சாக்கடைப் பேச்சுகளும் !!??

vairamuthu controversy

தமிழக அரசியல்

வைரமுத்துவின் கம்பீரமும் பார்ப்பனர்களின் சாக்கடைப் பேச்சுகளும் !!??

ஆண்டாள் சர்ச்சையில்  சாதி மத சண்டை களுக்கு முயற்சி செய்த பார்ப்பனீய சூழ்ச்சி தமிழகத்தில் மூக்கு உடை பட்டு நிற்கிறது.

ஆண்டாள் எனக்கும் தாய்தான் . எனக்குத் தமிழ்ப்பால் கொடுத்தவள். அவளை நான் அவதூறு செய்வேனா என்றும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மூலம் இரண்டு பேராசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் என்றும் வைரமுத்து பேட்டி கொடுத்திருந்தார்.    அந்தப் பேராசிரியர்  நாராயணனை  தந்தி டி வி தொலைபேசியில் பேட்டி கண்ட போது ஆமாம் நான்தான் அந்த மேற்கோளை எழுதினேன் என்று அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.    மூலம் எழுதியவர் எந்த குற்றமும் செய்யாதவர் என்றால் அதை மேற்கொள் காட்டிய நான் எப்படி குற்றவாளியாவேன் என்ற வைரமுத்துவின் கேள்விக்கு எந்த புத்திசாலியும் பதில் சொல்ல முடியவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை என்பது அனைத்து அம்சங்களையும் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கூட புரியாதவர்களாக இவர்கள் இருக்க மாட்டார்கள்.    தெரிந்தே இதை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று ஏங்குபவர்க ளாகத்தான் தமிழ் சமூகம் பார்க்கிறது.

இன்னமும் தேவதாசி நடைமுறை தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் இருப்பதாகவும் அதை ஒழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.     அதில் பாதிக்கப்  பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்.

தமிழ் நாட்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் வந்த போது சத்தியமூர்த்தி அய்யர்  எதிர்த்தார்.   முத்துலெட்சுமி ரெட்டி ஆதரித்து பேசி வேண்டும் என்றால் உங்கள் வீட்டுப் பெண்களையும் அதில் அந்த தேவ கைங்கரியத்தில் ஈடுபடுத்துங்களேன் என்று கேட்டதாகவும் சொல்வார்கள்.

இவர்கள்  வருத்தம் எல்லாம் அந்த தேவதாசி முறை இருந்ததா இல்லையா  என்பதை பற்றி எல்லாம் இல்லை.

அந்தப் படி இறைவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவராக ஆண்டாள் வாழ்ந்தாரா இல்லையா என்பது என்பதே விவாதத்துக்கு கூட வரக்கூடாது என்றுதான் அவர்கள் வாதம் இடுகிறார்கள்.

வருத்தம் தெரிவித்தது கூட சக மனிதனை நான் நேசிக்கிறேன் என்பதற்காகத்தான் என்று தனது பெருந்தன்மையையும் அடிக்கோள்  இட்டு காட்டியிருக்கிறார் வைரமுத்து.    உண்மையில் தமிழர்களின் கௌரவத்தை நிலை நாட்டிய வைரமுத்து கொண்டாடப் பட வேண்டியவர்.

இத்தனைக்கும் அவர் அரசியல் வாதியல்ல.   தமிழுக்காக வாழ்பவர்.

அவரை கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு எஸ் வி சேகர் என்ற பார்ப்பனர் வாய்க்கொழுப்போடு ‘ முட்டாள் தனமாக’ வைரமுத்து அறிக்கை கொடுத்திருப்பதாக பேட்டி கொடுக்கிறான்.    இன்னொரு பார்ப்பன ர் உபதேசம் செய்து பேசுகிறவர்  இவனெல்லாம் ஏதோவொரு சோழன் போல  புழுத்து சாவான் என்று சாபம் கொடுக்கிறான்.     வேளுக்குடி கிருஷ்ணன் ஓரளவு நிதானமாக பேச கூடியவர் என்று பேர் எடுத்தவர்.   அவர்கூட இது சரியில்லை என்று கூறுகிறார்.   எந்த ஒரு பார்ப்பனரும் வைரமுத்துவின் பக்கம் இருக்கும் நியாயத்தை பார்க்கக் கூட  தயாராக  இல்லை.

ராஜாஜி ஒரு பார்ப்பனர்.  அவர் தனது கட்டுரை ஒன்றில் திருப்பாவையை ஆண்டாள் எழுதியிருப்பாரா பெரியாழ்வாரே எழுதி ஆண்டாள் பெயரில் வெளியிட்டிருப்பாரா  என்ற சந்தேகத்தை எழுப்பியதாக சொல்கிறார்கள்.   அப்போது யாரும் ஆட்சேபிக்க வில்லையே?

எல்லாம் போகட்டும் இப்போது கூட கோவில்களில் தமிழர்களுக்கு என்ன இடம்.?

சூத்திரர்களாக , வெளியில் இருந்து வணங்கும் உரிமை மட்டுமே கொண்டவர்களாக , இழிவு படுத்துகிறார் களா இல்லையா?

கிராம கோவில்களில் கூட சாதி பிரிவினைகள் இருக்கின்றவே தவிர பார்ப்பன ஆதிக்கம் குறைந்திருக்கிறதா?

இவர்களை நாம் அடிமைப் படுத்தி வைத்திருந்தோம் இப்போது நம்மோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய உரிமைகளை கொடுத்து   விடுவோம் என்று பார்ப்பனர்கள் வருவார்களா?

சமத்துவம் தான் இந்துக் கோவில்களில் இனி கோலோச்சும்.    அங்கு பார்ப்பனர்களுக்கு தனி சலுகை இல்லை. வருவாய் இல்லை என்றால் ஒரு பார்ப்பானும் இந்துவாக இருக்க மாட்டான்.

பெரிய கோவில்களின் வருவாய்களை எப்படி பிரித்து கொள்கிறார்கள் என்பதை சாதாரண இந்து அறிவானா?

எப்படியோ, ஆண்டாள் சர்ச்சையில்

எல்லாத் தமிழர்களும் ஓரணியில்.

காட்டி கொடுத்து லாபம் பார்க்க நினைக்கும் நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் , தமிழிசை போன்ற பா ஜ க வில் தங்களை அடிமைப் படுத்திக் கொண்ட வர்கள் மட்டும் மறுபக்கம்.

இன்னும் தமிழன் சுயமரியாதை இழக்க வில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top