Connect with us

சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்த பின்னும் குஜராத் அரசு அனுமதி அளிக்காததால் விடுதலை ஆன கேத்தன் தேசாய் ??!!

இந்திய அரசியல்

சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்த பின்னும் குஜராத் அரசு அனுமதி அளிக்காததால் விடுதலை ஆன கேத்தன் தேசாய் ??!!

இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் கேத்தன் தேசாய்
மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தப் பட்டு பதவி விலகினார்.
அவர் வீட்டில் இருந்து கோடிகோடியாய் பணமும்
கிலோக்கள் கணக்கில் தங்கமும் கைப்பற்றப் பட்டதாக செய்திகள் வந்தன.
குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் தலைவர் பொறுப்புக்கு
மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவதும் நடந்தது.

உலக மருத்துவ கவுன்சில் தேர்தலிலும் வென்று தலைவர் ஆனார்.
இவர் மீதும் இன்னும் நால்வர் மீதும் சி பி ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
ஆனால் ஒவ்வொரு வழக்கிலும்
அரசு உரிய அனுமதி அளிக்காததால் விடுதலை ஆகி வருகிறார்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால்
அரசு ஊழியர் அனைவரும் சமம் அல்ல.
கீழ் நிலையில் உள்ளோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால்
விசாரணை தொடரும்.
மேல் நிலையில் உள்ளோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டாலும்
அரசு அனுமதி அளிக்கா விட்டால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிடும்.
அதுதான் கேத்தன் தேசாய் பொருத்தும் நடந்திருக்கிறது.

அதாவது இவரைத்தவிர மற்ற நால்வர் மீதும் வழக்கு தொடர்ந்ந்து நடைபெறும்.
குற்றம் நிரூபிக்கப் பட்டாலும் மேல் அதிகாரி தப்பித்து விடுவார்
கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப் படுவர்.
அரசு ஏன் இவரை காப்பாற்ற வேண்டும்?
உரிய அதிகாரம் பெற்ற அமைப்பு , அதாவது மாநில அரசு , தன் விருப்பப் படி
அனுமதி அளிக்கவோ அனுமதி மறுக்கவோ முடியுமா?
இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படாமல் இருக்க
ஏன் நீதிமன்றம் தலையிடக் கூடாது?
அப்படிப்பார்த்தால் எவரையும் தப்பிக்க வைக்கும் அதிகாரம்
மாநில அரசுகளுக்கு இருக்கிறதா?
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 197
ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 19 ஆகியவை
இந்த தடைகளை ஏற்படுத்துகின்றன.
மறுபரிசீலனை செய்ய வேண்டிய சட்டம் இது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top