Connect with us

தேதி ராசி பார்த்து சட்ட மன்றத்தை கலைத்த தெலுங்கானா முதல்வர்? பாஜக வுடன் கூட்டா?

இந்திய அரசியல்

தேதி ராசி பார்த்து சட்ட மன்றத்தை கலைத்த தெலுங்கானா முதல்வர்? பாஜக வுடன் கூட்டா?

தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகரராவ்
ஜோதிடம் எண் ராசி பார்ப்பவர்.
அவருக்கு எண் 6 ராசியாம்.
அதனால் அந்த தேதியில் சட்ட மன்றத்தை கலைத்து தேர்தலுக்கு தயார்
என அறிவிப்பார் என ஊடகங்கள் எழுதின.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் எழுதியது.
பலரும் நம்பவில்லை. ஆனால் அதைத்தான் செய்தார் கே சி ஆர்.

கலைத்து மட்டுமல்ல ஜெயலலிதா ஸ்டைலில்
119 சட்ட மன்ற தொகுதிகளில்
105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்தார்.
மிச்ச தொகுதிகளை பா ஜ க உள்ளிட்ட ‘ நண்பர்களுக்கு’ என வைத்திருக்காலாம்.
அடுத்த ஆண்டு ஆகஸ்டு வரை இருக்கும் பதவியை
ஏன் சுருக்கிக் கொள்ள வேண்டும் ?
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும்
அதோடு சேர்த்து நடத்தியிருக்கலாமே ?
பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்த கே சி ஆர் விரும்பவில்லை
ஏனென்றால் அப்போது மோடியா ராகுலா என்பதுதான் பிரதானமாக இருக்கும்.

தனியாக நடத்தினால் கே சி ஆருக்கு போட்டி இருக்காது
என நம்புகிறார். இப்படி
முன்கூட்டியே தேர்தல் நடத்திய வாஜ்பாய் 2004 ல் தோற்றார்.
காங்கிரசை மோசமாக திட்டும் கே சி ஆர் பா ஜ வை அப்படி திட்டுவதில்லை.
ஏனென்றால் கே சி ஆரின் இந்த திட்டத்திற்கு
பிரதமர் மோடி ஆதரவாக இருப்பதுதான்.
இவர் சட்ட மன்ற கலைப்பை அறிவித்த உடனே
தேர்தல் கமிஷன் அப்படியே ஏற்றுக் கொள்கிறது.
மாநில தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான் மத்திய பிரதேஷ்
சட்டிஸ்கார் மிசோரம் உள்ளிட்டவைகளோடு தெலுங்கானாவையும்
சேர்த்திருக்கலாம். ஆனால் தேர்தல் கமிஷன் டிசம்பரிலேயே
தெலுங்கானா தேர்தலை நடத்த தயாராக இருக்கிறது.

அதுவும் எப்படி தெரியுமா? வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு
தேர்தலுக்கு 2019 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி தான் முடிவுறும்
என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இப்போது சென்ற ஆண்டு வாக்காளர் பட்டியலை வைத்தே
டிசம்பரின் நடத்தி விடலாம் என திட்டமிடுகிறார்கள்.
தேர்தல் கமிஷன் ஒத்துழைப்புடன்.
மோடியின் ஆசியில்லாமல் இது நடக்குமா?
இவர்கள் தான் சட்ட மன்ற தேர்தல்களையும் பாராளுமன்ற தேர்தலையும்
ஒரே நேரத்தில் நடத்துகிறவர்களாம் .
கே சி ஆர் ராகுலை ‘ பெரிய கோமாளி” என்று வருணித்து
தன் முதல் எதிரி யார் என்பதை அறிவித்து விட்டார்.

பாராளுமன்றத்தில் மோடியை கட்டிபிடித்ததையும் கண்ணடித்ததையும்
சுட்டிகாட்டி விமர்சித்தாலும் அது தரமானதா?
சாதனைகளால் தன்னால் வெல்லமுடியும் என்று
கே சி ஆர் நம்பியிருந்தால் இப்படி தேர்தலை
முன்னேற்றி இருக்க வேண்டியதில்லையே ?!!
பார்க்கலாம் கே சி ஆர் – மோடி ரகசிய கூட்டு வெல்கிறதா என்று
மோடிக்கு கே சி ஆரின் ஆதரவு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்
உறுதியானால் போதும். அதற்கு இப்போது கே சி ஆரின் திட்டங்களுக்கு
ஆதரவு அளிக்கிறார்.
ஆனால் மக்களின் தீர்ப்பு
எண் ராசியினால் நிர்ணயிக்கப் படுவதில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top