Connect with us

தமிழரை அடித்து உதைத்து முகநூலில் பதிவிட்ட கன்னட வெறியர்கள்??!! கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அரசு??

kannada cauvery issue

தமிழக அரசியல்

தமிழரை அடித்து உதைத்து முகநூலில் பதிவிட்ட கன்னட வெறியர்கள்??!! கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அரசு??

உச்சநீதி மன்றம் காவிரியில் தண்ணீர் விடச் சொல்லி உத்தரவிட்டது .       கர்நாடகாவில் பந்த் நடத்துகிறார்கள்.    தமிழ்நாட்டு பேருந்துகள் தாக்கப் படுகின்றன.     பெங்களுரு செல்லும் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன.   அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.     ஆனால் பெங்களுருவிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் வந்து போகின்றன.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக பெங்களுருவில் இருந்து ஓர் தமிழர் முகநூலில் ஒரு க்பதிவு செய்கிறார்.     சென்னை அமைதியாக இருக்கிறது.   ஆனால் பெங்களுருவில் ஏன் அமைதி இல்லை என்று கேட்கிறார்.

அவரது முகவரியை தேடி ஆளைப் பிடித்து கூட்டமாக கூடி நின்று அடிக்கிறார்கள்.   காவிரி கர்நாடகத்துக்கே  சொந்தம் என்று சொல்ல வைக்கிறார்கள்.  அவர் கன்னடத்திலேயே பேசுகிறார்.   எல்லாவற்றையும் பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.    நோக்கம் என்ன ?    பிற கன்னடர்களுக்கு நீங்களும் இப்படி செய்யுங்கள் என்பதுதானே?

எத்தனை நாட்களுக்கு தமிழர்கள் அமைதி காக்க வேண்டும்?

பிரச்சினை வேறு திசையில் பயணிக்கிறது .

காங்கிரஸ் அரசு சட்ட ஒழுங்கை காக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

தமிழர் வெறுப்பு விதைக்கப் படுகிறது. வளர்க்கப் படுகிறது.  ஆனால்  வஞ்சிக்கப் பட்ட தமிழகம் அமைதி காக்கிறது.

தமிழக அரசு மௌனம் காக்கிறது.    உணர்வாளர்கள்  கொதிக்கிறார்கள் !

விரும்பத்தகாத விளைவுகளுக்கு இரண்டு மாநில அரசுகளே பொறுப்பு??!!

வருமுன் காப்பாளர்களா?    வந்தபின்னும் வஞ்சிப்பார்களா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top