Connect with us

போன் செய்தால் போதும் வீட்டுக்கு வந்து தொண்டு செய்யும் அரசு; கேஜ்ரிவால் சாதனை !!!

இந்திய அரசியல்

போன் செய்தால் போதும் வீட்டுக்கு வந்து தொண்டு செய்யும் அரசு; கேஜ்ரிவால் சாதனை !!!

அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர்.
அறிவித்திருக்கும் புரட்சி திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பது வேறு.
ஆனால் நல்ல தொடக்கம்.
ஆம். போன் செய்தால் போதும் . அரசு அதிகாரி வீடு தேடி வந்து
40 வகையான வேலைகளை பொதுமக்களுக்கு செய்து கொடுப்பார்.

தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் பிற்பட்டோர் சான்றிதழ்
குடும்ப நல திட்டங்கள் பற்றிய அனைத்து மனுக்கள்
ஓட்டுனர் சான்றிதழ் தொடர்பான அனைத்து வேலைகளும்
சொத்து உரிமை மாற்றம் தொடர்பான அனைத்து வேலைகளும்
வீட்டு தலைவருக்கு தேவையான குடும்ப அட்டைகள்
இன்னும் இதுபோன்ற சுமார் 40 பணிகள்
வரும்காலத்தில் அதை 150 பணிகளுக்கு விரிவு படுத்தும் திட்டமும் உண்டு.

நேற்று இந்த திட்டம் தொடங்கியவுடன் சுமார் 21000 போன் அழைப்புகள்
அவைகளில் சுமார் 1200 மட்டும் அதிகாரிகளால் தொடர்பு கிடைக்கப் பட்டு
விபரங்கள் கோரிப்பெற்றபின் 369 வேண்டுகோள்கள் அதிகாரிகளால்
ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் செய்து முடிக்கப் படும்
என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டது.
எல்லா வேலைகளும் முடியுமா எல்லாருக்கும் முடியுமா
அத்தனை அதிகாரிகள் இருக்கிறார்களா என்பதை தாண்டி
ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
அனுபவத்தின் அடிப்படையில் அதை நிவர்த்தி செய்து
முழுமையாக்கலாம். அந்த வகையில்
கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருக்கிறார்.

அரசு அலுவலகத்தில் இரண்டற கலந்திருக்கும் ஊழல் நோயை
விரட்ட இந்த முறை முழுமையாக பயனளிக்கும்.
இந்தியா முழுமைக்கும் எல்லா அரசுகளும்
பின் பற்ற வேண்டிய முன்மாதிரி திட்டமாக
இந்த வீடு தேடி வரும் அரசுப் பணி திட்டம்
விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.
நிறை குறைகளை ஆராய்ந்து
மற்றவர்களும் முயற்சிக்கட்டுமே?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top