Connect with us

வக்கீல்களை மிரட்டும் நீதிபதிகள் ??!!! தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி ??

madras_hc_lawyer

Latest News

வக்கீல்களை மிரட்டும் நீதிபதிகள் ??!!! தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி ??

தவறு செய்யும் வக்கீல்கள் மீது  நடவடிக்கை எடுக்க நீதிபதி களுக்கு அதிகாரம் தரும் வகையில் சட்டம் திருத்தப் பட்டது.

இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வக்கீல்கள் தவறு செய்தால்  நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் என்ற அமைப்பு இருக்கிறது.

அந்த பார் கவுன்ச்ல் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் தவறு செய்யும் வக்கீல்கள்  மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நீதிபதிகளே ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்?

நீதிபதிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க சரியான சுலபமான வழிகள் இல்லையே?

தமிழக உயர் நீதி மன்ற நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவி ஏற்ற பிறகு நிர்வாகக ரீதியாக வக்கீல்கள் மீது நடவடிக்கை அதிகாக ஆகி விட்டது.

வக்கீல்கள் போராட்டம் முடக்கப் படவேண்டும் என்பதில் அதிக அக்கரையுடன் செயல் பட்டார்.   உயர் நீதி மன்ற வளாகத்திற்கு தனி காவல்  துறை கட்டுப்பாடு கொண்டுவந்து வக்கீல்கள் போராட முட்டுக் கட்டை போட்டது துவங்கி அது தொடர்கிறது.

வக்கீல்கள் போராட்டம் ஒரு கட்டுக்குள்    கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நியாயம்இ ருக்கலாம்.

ஆனால் பல கால கட்டங்களில் சமுதாய மாற்றங்கள் வக்கீல்கள் போராட்டம்காரணமாக ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த சட்ட திருத்தம் இங்கு மட்டும் ஏன் என்பதற்கு பதில் இல்லை.

சட்டம் இருக்கும் .  ஆனால் அமுல்படுத்தப் படாது என்ற தனது உறுதி மொழியை வக்கீல்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தலைமை நீதிபதியின்  வேண்டுகோள். .

இது அபத்தம் இல்லையா   அமுல்படுத்தப் படாத சட்ட திருத்தம் ஏன் இருக்க வேண்டும்?                 தேவைப்  ப டும்போது  பயன்படுத்துவோம் என்பது தானே?

சட்டத் துறை முதலில் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top