Connect with us

உயர்நீதி மன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்பிட 15 ஆண்டுகள் ஆகும்

இந்திய அரசியல்

உயர்நீதி மன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்பிட 15 ஆண்டுகள் ஆகும்

இந்தியாவில் மொத்தம் 24 உயர் நீதிமன்றங்கள்
மொத்த நீதிபதிகள் 1079
இப்பொது இருப்பவர்கள் 652
காலியிடங்கள் 427 அதாவது 40%
இவர்களை நியமிக்கத்தான் 15 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது .
முந்தைய காங்கிரஸ் அரசு நியமித்தது 250 கூடுதல் நீதிபதிகளாம்
இப்போதைய அரசு நியமித்தது 313 நீதிபதிகளாம்

உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் 39.52லட்சம்
22% வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலானவை
நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதி மன்றம் தன் அதிகாரத்திலேயே வைத்திருக்கிறது.

கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் முடிவெடுக்கிறார்கள்
மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு பனிப்போர் நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது.
சமுதாயத்தின் பல தரப்பினரும் அதிகாரம் பெற வழி வகை செய்யும்
நீதிபதிகள் நியமனம் தாமதிக்கப் படுவதில் நியாயமே இல்லை.

அதுவும் உச்சநீதி மன்றம் தன் கையில் வைத்திருக்கும் அதிகாரம்
பயன் படுத்தப் படுவதில் வேண்டுமென்றே தாமதம் ஏற்படுத்தப் பட்டாலும்
அதுவும் ஒருவித அநீதியே அரசும் நீதிபதிகளும் முட்டி மோதிக்கொள்ளும்
இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டு அனைத்து நீதிபதி பணியிடங்களும் உடனடியாக நிரப்பப் பட வேண்டும். மக்கள் சக்தி இதற்கு அழுத்தம் தந்தால்தான் இது சாத்தியமாகும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கட்சி சார்ந்து பராமுகமாக இருப்பார்கள்
கட்சி சாராத அமைப்புகள் தான் இந்த அழுத்தத்தை தர வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top