Connect with us

இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என தீர்ப்பு எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி??!

hindu-judge

சட்டம்

இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என தீர்ப்பு எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி??!

ராணுவப் பணியில் சேர தேர்வான ஒருவருக்கு  குடியுரிமை சான்று தர மறுத்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் ஆர் சென் என்பவர் இந்தியாவை பாகப்பிரிவினைக்குப் பிறகு இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என்று  10.12.2018ல் ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறார்.

மேலும் தனது தீர்ப்பில் அவர் கூறியிருந்தது “இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது லட்சக் கணக்கானவர்கள் சீக்கியர்களும் இந்துக்களும் கொல்லப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு மூதாதையர் விட்டு சென்ற சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடி வர நேரிட்டது. பாகிஸ்தான் தன்னை முஸ்லிம் நாடு என்று அறிவித்துக் கொண்டது. அப்போதே இந்தியா தன்னை இந்து நாடாக அறிவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்”

மேலும் ‘இனி எதிர்காலத்திலும் பங்களா தேஷ் போன்ற நாடுகளில் இருந்து ஓடி வரும் எல்லாருக்கும் இந்திய குடியுரிமை தர எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும்” என்றும் தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

அரசியல் சட்டம் தெரிந்தவர் ஒருவர் இப்படி ஒரு தீர்ப்பை எழுதியிருக்க முடியாது.  அதேநேரம் நீதிபதி சென் அரசியல் சட்டம் தெரியாதவர் என்று சொல்ல முடியாது.    ஆக இது செல்லாத தீர்ப்பு என்று தெரிந்தோ தெரியாமலோ அந்த தீர்ப்பை எழுதிவிட்டார்.

இப்போது மேன்முறைஈட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘இந்த தீர்ப்பு  செல்லத்தக்கதல்ல. அரசியல் சட்டத்திற்கு முரணாக இந்த தீர்ப்பு இருப்பதால்  சட்டத்தின் முன் இது இல்லா நிலையது ஆகும். எனவே ரத்து செய்கிறோம்’ என்று தீர்ப்பு தந்திருக்கிறார்கள்.

சட்டம் படித்த நீதிபதிகள் அரசியலை மனதில் கொண்டு அல்லது தங்களுக்கு இருக்கும் அரசியல் விருப்பங்களை முன்னிறுத்தி இது போன்ற தீர்ப்புகளை எழுதினால் நாட்டில் நீதித்துறை மீது எப்படி நம்பிக்கை வரும்?

நீதித்துறையில் அரசியல் சார்புள்ளவர்கள் ஊடுருவி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பே சாட்சி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top