ஒலிம்பிக்கில் இந்தியா – ஏமாற்றம் ?? ஆறுதல் தந்த சிந்து ,சாக்க்ஷி மாலிக் !!!!

Share

மக்கட்தொகை அடிப்படையில் இந்தியா ஒலிம்பிக்கில் பல தங்கங்கள் அல்லது  வெள்ளிகள் பெற்றிருக்க  வேண்டும்.

ஊக்க மருந்து உட்கொண்டதாக நர்சிங் யாதவ்  நான்கு ஆண்டுகள் தடை செய்யப் பட்ட பின்னணியில் நம் நாட்டிலேயே அவருக்கு எதிராக சதி செய்யப் பட்டதாக வந்த செய்திகளை ஆய்வு செய்யகூட நம்மால் முடிய வில்லை.

பெண்கள்தான் நாட்டின் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்.      பெண் சிசுக்கொலை யை நாம்  தடுத்திரா விட்டால் சாக்ஷி மாலிக் போன்றவர்கள் என்னவாகி இருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பி கிரிகெட் வீரர் ஷேவாக் அருமையாக விமர்சித்திருந்தார்.

தீபா கர்மாகர்  சானியா மிர்சா , சைய்னா நேவால்  லலிதா பாபர்  போன்ற பெண்மணிகள் முன்னணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பி வி சிந்து பெற்ற வெள்ளியும் சாக்ஷி பெற்ற வெண்கலமும் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கின்றன.

தெலுன்கானாவும் அரியானாவும் மகிழ்ச்சி யடையலாம் .

தமிழ்நாட்டுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.    நமக்கு நெறைய வேறு வேலைகள் இருக்கின்றன.   அரசியல் விளையாட்டுக்கே நேரம் போதவில்லை.

சிந்துவுக்கும் சாட்சி மாலிக்கிக்கும்  வாழ்த்துக்கள்.

 

This website uses cookies.