Connect with us

பணம் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் இளையராஜா??!!

ilayaraja

வணிகம்

பணம் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் இளையராஜா??!!

தனக்கு உரிமையுள்ள ஒன்றைக் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் ஒருவரை எப்படி விமர்சிப்பது?

அவர்தான் இளையராஜா?   தனது பாடல்களை பாடி பணம் சம்பாதிப்பவர்கள் தனக்குரிய ராயல்டி பணத்தை கொடுத்து விட  வேண்டும் என்று அவர் கேட்பது சட்டப்படி சரியானதுதான் என்றாலும் ஏன் அவரது கோரிக்கையை சக இசைக் கலைஞர்கள் ஆதரிக்க  வில்லை  என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி?

இவர் மட்டும்தான் இசைக் கலைஞரா? சங்கத்தில் இருக்கிறார் அல்லவா?

ராயல்டி வசூலிக்கும் உரிமையை சங்கத்துக்கு கொடுத்து விட்டு அவர்களுக்கு 20%   இவருக்கு  80% என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறாரே அவர்களை விட்டு பேச சொல்லி இருந்தால் இந்த விவாதம் தேவையற்ற ஒன்றாகி விடும்.

முன்பே இவருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் தகராறு வக்கீல் நோட்டிஸ் வரை போனது. நட்பு முறிந்ததுதான் மிச்சம்.

Intellectual  Property Rights  Society  ல் இவர் முன்பு அங்கத்தினர் ஆக இருந்து அவர்களுக்கு இந்த ராயல்டி உரிமையை வசூலிக்கும்  உரிமையை வழங்கி இருந்தாராம்.  பின்னர் இவர் அதில் இருந்து வெளியே வந்து அந்த  உரிமையை இசையமைப்பாளர் சங்கத்துக்கு  வழங்கியிருக்கிறார்.

உண்மையில் ஜேம்ஸ் வசந்தன் சொல்கிறபடி ஒரு பாடலுக்கு படம் தயாரித்தவர் , இசை அமைத்தவர், பாடல் எழுதியவர்  ,பாடல் பாடியவர் என நால்வர்க்கும் ராயல்டியில் பங்கு இருக்க வேண்டும்.   அப்படி இருக்கிறதா?

ஒருவரை விட்டு மற்றொருவர் மட்டுமே பங்கு கோர முடியாது.  மற்றவர்களுக்கு தர வேண்டும் என இளையராஜா சொல்லவில்லை.  தனக்கு உரியதை மட்டும் கேட்கிறார்.

அதை ஏன் சுமுகமாக செய்து கொள்ள முடியவில்லை?

கங்கை அமரன் சொன்ன படி இளையராஜாவுக்கு தேவை இரண்டு இட்லி, கொஞ்சம் சோறு, இரண்டு சப்பாத்திகள் மட்டுமே.

இளையராஜா இசைஞானி மட்டுமல்ல மக்களால் நேசிக்கப் படும் நல்லவர்.

அவர் தன் பெயரை  கெடுத்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்பதே அவரது அபிமானிகளின் அக்கறை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in வணிகம்

To Top