Connect with us

சபரிமலை; உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் தேவசம் போர்டு , மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது?

மதம்

சபரிமலை; உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் தேவசம் போர்டு , மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது?

10 -50 வயதுக்குள் உள்ள பெண்கள் அய்யபனை தரிசிக்கலாம் என்று உச்ச நீதி  மன்றம் உத்திரவிட்டது சனாதனிகள் மத்தியில் பெரிய பூகம்பத்தையே கிளப்பி விட்டது.

நாம் நம் சுயநலனை பாதுகாக்க எழுதிவைத்த  எல்லாவற்றையும் இனி நீதிமன்றம் பரிசீலித்தால் என்ன ஆவது என்ற கேள்வி அவர்களை உலுக்கி இருக்கலாம்.

பன்முனை தாக்குதலை தொடங்கி விட்டார்கள்.

ஒருபுறம் பெண் பக்தர்கள் யாரும் வர மாட்டார்கள் என்று பிரச்சாரம்.

அதுதான் வரமாட்டார்களே பின் ஏன் பிரச்சாரம்? வருபவர்கள் வந்து விட்டு போகட்டுமே.

மாநில அரசு வரவேற்று விட்டது. தேவஸ்தானம் பெண்களுக்கு  தனி வரிசை கிடையாது என்று அறிவிக்கிறது. பொது வரிசையில் தான் வர வேண்டும் என்றார்கள்.. பெண்களின் மீது அவ்வளவு அக்கறை வரக்கூடாது என்று சொல்லியும் வருபவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்று சொல்கிறார்களா?

இப்போது பந்தள அரச குடும்பத்தை வைத்து மிரட்ட முனைந்திருக்கிறார்கள்.

அய்யப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்கள் தர மாட்டார்களாம்?

உச்சநீதி மன்றத்தை மிரட்டுகிறார்களா? தீர்ப்பை எப்படி அமுல் படுத்துகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம் என்று பொருள்!

தீர்ப்பை வரவேற்று நான் கோவிலுக்கு போகப் போகிறேன் என்று அறிவித்த புனே பெண் ஆர்வலர் தீப்தி தேசாய் என்பவருக்கு மிரட்டி இருநூறு கடிதங்கள்வந்திருக்கிறதாம்.   தொலைபேசியிலும் கொலை மிரட்டல் வருகிறதாம்.  எப்படிஇருக்கிறது?

ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த அடாவடித்தனத்தை அவர்கள் தொடரும் போது எல்லாம் பொது மக்கள் அவர்களுக்கு  எதிராக திரும்பியது தான் வரலாறாக இருந்திருக்கிறது.

இன்று தேவசம் போர்டு கூடி உச்ச நீதி மன்றத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவது  இல்லை  என்ற நல்ல முடிவை  எடுத்துள்ளது.  இதனை அதன் தலைவர்  பத்மகுமார் அறிவித்தார்.

ஆனால் சனாதனிகள் அடங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

சனாதனம் வஞ்சனையை விதியாக்க முயல்வதும் பகுத்தறிவு அவைகளை போரிட்டு அகற்றுவதும் தொடர்ந்து நடைபெறும் மாற்றங்கள் தான். இப்போதும்  வெல்லப்போவது பகுத்தறிவே?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top