Connect with us

குட்கா ஊழல் – சிபிஐ விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அதிரடி திருப்பங்கள்?

தமிழக அரசியல்

குட்கா ஊழல் – சிபிஐ விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அதிரடி திருப்பங்கள்?

குட்கா ஊழல் தொடர்பாக சிபி ஐ மேற்கொண்டு வரும் விசாரணையில்
சினிமாவை மிஞ்சும் அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
இன்று 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சி பி ஐ அதிரடி சோதனை
நடத்தி வருகிறது.

காவல் துறை தலைவர் – தமிழக டிஜிபி டி கே ராஜேந்திரன் வீட்டில்
அவரை அலுவலகம் செல்ல விடாமல் விசாரணை நடத்தி வருகிறது.
அதேபோல் முன்னாள் சென்னை காவல் துறை கமிஷனர் ஜார்ஜ் வீட்டில்-
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் என்று
சோதனைகள் நீள்கின்றன.

இந்த வழக்கில் தொடக்க முதலே குற்றவாளிகளை பாதுகாக்க
எல்லா வேலைகளையும் செய்து வந்த தமிழக அரசு
இப்போது மட்டும் எப்படி காட்டிக் கொடுக்கும்
அல்லது பதவி நீக்கும். ?

திமுக தலைவர் ஸ்டாலின் -மருத்துவர் ராமதாஸ் கம்யுனிஸ்டு தலைவர்கள்
எல்லாம் கேட்டுக்கொண்டபடி எடப்பாடி விஜயபாஸ்கரை நீக்கிவிடுவாரா?
முதல்வர் பிழைப்பு 18 எம் எல் ஏ வழக்கு தீர்ப்பில் தொங்கிக்கொண்டிருகிறது.!
இதில் அவராவது நடவடிக்கை எடுப்பதாவது.?

என்னென்ன செய்து விசாரணையை தடுக்க முயற்சித்தார்கள்?
வருமான வரித்துறை கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த
டி ஜி பி அசோக்குமாரை பதவி விலக்கினார்கள.
அந்தக் கடிதத்தை காணமல் அடித்த ராம்மோகன் ராவை காப்பாற்றினார்கள்.
கடிதம் காணோம் என்று கிரிஜா வைத்தியநாதனை
உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வைத்தார்கள்.

வருமான வரித்துறை கடிதம் காரணமாக நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால்
விஜயபாஸ்கர், ஜார்ஜ் ,ராஜேந்திரன் எல்லாம்
விசாரணை வளையத்துக்குள் வருவார்கள்
என்பதற்காக ஜார்ஜை விட்டு கீழ் மட்ட அதிகாரிகளை குற்றம்
சுமத்தி கடிதம் எழுத வைத்து மேலே உள்ளவர்கள் மீது
நடவடிக்கை போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.
திமுக நடவடிக்கையால் உயர் நீதிமன்றம் சி பி ஐ விசாரணைக்கு
உத்தரவிட்டதும் – அதை எதிர்த்து ஒரு கடைநிலை ஊழியரை வைத்து
உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்ய வைத்தார்கள்.
அதை உச்சநீதி மன்றம் நிராகரித்ததால்இப்போது சிபிஐ
குடோன் அதிபர் மாதவராவை விசாரித்து
இப்போது எல்லார் வீடுகளிலும் ரைடு நடத்தி வருகிறது.

வருமான வரி துறை கடிதத்தின் அடிப்படையில்தான்
நடவடிக்கைகள் தொடங்கப் பட்டிருக்க வேண்டும்- அது கடைசியில்
போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா அறையில் கிடைத்தது ?!
சி பி ஐ விசாரணை தொடரட்டும் – உண்மை வெளிவரட்டும்!
ஆனால் குற்றம் சாட்டப் பட்ட டிஜிபி ராஜேந்திரனுக்கு
பதவி நீட்டிப்பு வழங்கியதன் மூலம்
இந்த ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
அவர்கள் எங்கள் ஆசி பெற்றவர்கள்தான்
எனவே நாங்கள் பாதுகாப்போம் !

இவர்களாவது அரசியல்வாதிகள்- டி ஜி பி அவர்களே
உங்களுக்காவது காவல் துறையின் மதிப்பை காக்க வேண்டும்
என்ற உணர்வு வரவில்லையா?
அதெப்படி குற்றச்சாட்டை சுமந்து கொண்டே
காவல் துறை தலைவர் பொறுப்பில் தொடர்கிறீர்கள்?
அது காவல் துறைக்கே களங்கம் என்பது புரியாதவரா நீங்கள்?
நீதிமன்றம் தலையில் குட்டும் வரையில்
காத்திருக்கப் போகிறீர்களாக்கும் ?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top