மதம்

குரு நானக் பிறந்த நாள் சிந்தனைகள்; போதனைகளுக்கும் நடைமுறைக்கும் தொடர்பு அற்றுப் போன கதை.??!!

Share

இன்று குரு நானக் பிறந்த நாள். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்.

சீக்கிய மக்களுக்கு மூன்று நாள் கொண்டாட்டம்.

அவர் இந்து சமய சீர்திருத்தவாதி. ஆனால் அவரது வழிமுறை தனி மதமாகிப் போனது தான் துயரம்.

நானக் தனி கடவுளை கற்பிக்க வில்லை. எல்லா மதங்களும் உபதேசிக்கும் அன்பு , அறம், கருணை, போன்ற நல்ல குணங்கள்தான் சீக்கிய மதத்திற்கும் அடிப்படை.

எல்லா மதங்களில் இருந்தும் துதிப் பாடல்களை தொகுத்து அதுதான் குரு கிரந்த சாஹிப் என்று பெயரிட்டு அதையே மத நூல் ஆக்கினார்.

இந்து மத சம்பிரதாயங்களை ஒழிக்க விரும்பி தானே புது சம்பிரதாயங்களை உருவாக்கி விட்டார்.

ஐந்து காரியங்கள் சீக்கியர்களுக்கு கடமையாக்கப் பட்டன.

தாடி வளர்த்து தலைமுடியை டர்பன் கொண்டு கட்டிக் கொள்ளுதல், சீப்பு  வைத்துக் கொள்ளுதல், கைகளில் இரண்டு காப்புக் கட்டிக் கொள்ளுதல், இடையில் கிர்பன் என்ற குறுவாள் வைத்துக் கொள்ளுதல், இடையில் பாதுகாப்பான முடிந்து கொள்கிற அணிந்து கொள்ளுதல்  இவை ஐந்தும் கடமைகள்.

ஆனால் இந்துக்களின் சாதி பாகுபாடு விடாப் பிடியாக சீக்கியர்களை பிடித்துக் கொண்டது.   அதில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. ஆம்.   சாதியை அங்கீகரிக்காத மதத்தில் சாதி இருக்கிறது.

ஜாட் சாதி சீக்கியர்கள் உயர்ந்தவர்கள். செலவாக்கு வசதி மிக்கவர்கள். தலித் மற்றும் இதர சாதி சீக்கியர்கள் கொஞ்சம் கீழேதான்.

ஜியானி ஜெயில் சிங் ஜனாதிபதியானாலும் அவர் ஆசாரி சீக்கியர்தான். பூட்டா சிங் மந்திரியானாலும் அவர் தலித் சீக்கியர்தான். மதம் மாறினாலும் இந்து சாதி  அடையாளம் விட மாட்டேன் என்று துரத்துகிறது.

நானக் போதனைகளில் முக்கியமானவை;

1. குருவின் துணை இல்லாமல் கடவுளை அறியமுடியாது.

  1. மன்னனாக இருந்தாலும் அன்பு நிறைந்து எறும்புக்கு ஈடாக முடியாது.

3. தன் மீது நம்பிக்கை இல்லாதவன் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

  1. எதைப் பேசினால் உனக்கு கௌரவம் கிடைக்குமோ அதை மட்டுமே பேசு.
  2. உண்மையை அறிவது மேலானது அதற்கும் மேலானது உண்மையாக வாழ்வது.
  3. உலக ஆசையை துறை.
  4. கனவில் நடக்கும் நாடகமே உலகம்.
  5. உண்மையாக இறப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டால் அதை கேட்டது என்று அழைக்க மாட்டீர்கள்.

9. உலகத்தில் மகிழ்ச்சியை கேட்டால் துன்பம் வரும்.

  1. உலகை பாதுகாக்கிறவன் என்னை எங்கே வைக்கிறானோ அந்த இடமே எனக்கு சொர்க்கம். .

நமது வள்ளலார் போதித்த பலவும் குரு நானக் போதனைகளோடு ஒத்துப் போகின்றன.

நானக்கின் சீடர்கள் தனி மதம் ஆகிப் போனார்கள். வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இறை நாமத்தை ஜபிப்பது, கடமை ஆற்றுவது தொண்டு செய்வது இவைதான் சீக்கிய மதத்தின் சாரம்.

வடிவமில்லா இறைவன் தன் படைப்புகள் வழியே காட்சி யளிக்கிறான். இறைவனை ஆராதனை களாலும் பலிகளாலும் திருப்திப் படுத்த முடியாது. மூட நம்பிக்கைகள்  சிலை வழிபாடுகள் எல்லாம் பொருள் அற்றவை.

ஆனால் நடைமுறையில் சீக்கியர்கள் இந்து கடவுளர்களை வணங்க மறுப்பதில்லை.

பெரும்பாலும் இந்துக் கடவுளர் பெயர்களையே வைத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் இந்துக்கள் இல்லை என்று ஒரு இயக்கம் தோன்றினாலும் அது வலுப்  பெறவில்லை.

இன்றும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சீக்கிய மதம் பாவிக்கப்  படுகிறது.

போற்றத் தக்க குரு நானக் மக்களின் மனங்களில் நீடு  வாழ்வார்.

This website uses cookies.