Connect with us

55 ஆண்டுகளில் முதன் முதலாக சரத் பவார் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு??!!

sarathbawar

சட்டம்

55 ஆண்டுகளில் முதன் முதலாக சரத் பவார் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு??!!

மராட்டியத்தின் முதுபெரும் தலைவர் சரத் பவார். முதல் அமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் கடந்த 55 ஆண்டுக்காலமாக கோலோச்சியவர்.

காங்கிரசோடு முரண் பட்டு தனிக் கட்சி கண்ட இவர் இப்போது அதே காங்கிரசோடு கூட்டு கண்டு பாஜக -சிவசேனா அணியை எதிர்க்கிறார்.

இவரது கட்சியில் இருந்து பலரும் விலகி பாஜக -சிவசேனாவில்  இணைந்து வருகையில் இப்போது இவரது சக்தியை முற்றிலும் முடக்க திட்டமிட்டு மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் ஆதரவாளர்கள் மீதும் கூட்டுறவு சங்க ஊழல் என்று ஒரு புகாரை சுரீந்தர் அரோரா என்பவர் கொடுத்த புகாரை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்திருக்கிறது.

மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி சம்பந்தப்பட்ட ஊழல் 25000 கோடி ரூபாய் அளவுக்கு நடந்திருப்பதாக புகார் சொல்கிறது.

இந்த ஊழல் 2002 முதல் 2017 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்ததாம். எல்லாம் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி கொடுத்த கடன் பற்றியதாகும். இதை எல்லாம் ஆடிட் செய்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.

இதுவரை சரத் பவார் எந்த வங்கியிலும் எந்த கால கட்டத்திலும் இயக்குனராகக் கூட இருந்ததில்லை. பின் எப்படி அவர் தவறுக்கு துணை போய் இருக்க முடியும்? இது அவரது மகள் சுப்ரியா சூலே யில் கேள்வி.

மேலோட்டமாக பார்த்தால் இது மோசமான பழி வாங்கும் அரசியல்.

நீதிமன்றங்கள் எப்படி எந்த நடவடிக்கையை அங்கீகரிக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த பழி வாங்கும் நடவடிக்கையால் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top