இந்திய அரசியல்

நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது; பாஜக எம்.பி சு.சாமி ?!!

Share

பாஜக-வின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ப.சிதம்பரம் ஜெயிலுக்கு போவார் என்றும் பாஜக-வல் சேர முயன்று பாஜக சேர்க்க மறுத்ததால் சேர வில்லை என்றும் கூறியவர் சோனியாவும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் சிறை செல்வார் என்று கூறினார்.

அதுவாவது பிற கட்சிகளில் விமர்சிப்பதாக் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து கூறியதுதான் முக்கியம். மத்திய அரசின் சேவை பொருள் வரி சட்டத்தை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்றவர் நிதி அமைச்சர் என்பவர் பொருளாதாரத்தில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். துரத்ரிஷ்டமாக நமக்கு அப்படி கிடைக்கவில்லை. அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது என்றார்.

இப்படி சொல்லி விட்டு யார் வேண்டுமானாலும் கட்சியில் நீடித்து விடமுடியுமா?

பாஜக சுப்பிரமணிய சாமியை உள்ளே வைத்திருப்பதே அவர் ஆட்சி மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கத்தான். ஆனால் அதையும் மீறி அவர் தொடர்ந்து மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இது பாராட்ட வேண்டிய உட்கட்சி சுதந்திரமா? வேறு யார் வேண்டுமானாலும் இப்படி பேசி விட்டு கட்சியில் நீடிக்க முடியுமா?

பாஜக என்பது உயர் வகுப்பார் கட்சி. அதனால்தான் அவர்கள் மட்டும் எந்த பயமும் இன்றி தங்கள் மனதில் தோன்றியதை பேசமுடிகிறது.

பாஜக என்றாலே இரட்டை நாக்குதானா?

This website uses cookies.