Connect with us

சின்னத்தில் தேர்தல் கமிஷன் செய்யும் சின்னத்தனம்??!!

election-commision

இந்திய அரசியல்

சின்னத்தில் தேர்தல் கமிஷன் செய்யும் சின்னத்தனம்??!!

தேர்தல் கமிஷன் ஆளும் பாஜக வின் ஊதுகுழலாக செயல்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

தேர்தல் கமிஷன் ஆளும் பாஜக வின் ஊதுகுழலாக செயல்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் செய்கிறார்கள் என்பது கவலைக்குரியது.

அங்கீகாரம் இழந்தாலும் பாமக கேட்டவுடன் மாம்பழம் கிடைக்கிறது. அது பாஜக வின் கூட்டணிக்கட்சி.

ஆனால் சீமான் பழைய சின்னம் கேட்டால் மறுக்கப் பட்டு புதிய சின்னம் கொடுக்கப் படுகிறது.  பாஜகவுக்கு எதிரிக்கட்சி.

திருமாவளவன் கேட்டால் மோதிரம் மறுக்கப்பட்டு பானை கொடுக்கப் படுகிறது. எதிர்க்கட்சி கூட்டணி.

தினகரன் குக்கர் கேட்டால்  பதிவில்லை  என்ற காரணம் காட்டி மறுக்கப் பட்டு புது சின்னம் என்கிறது. இது சம்பந்தமாக உச்சநீதி  மன்றம் இன்று தினகரன் கட்சி வேட்பாளர்களை சுயேச்சைகள் ஆக பாவித்து அனைவருக்கும் குக்கர் சின்னம் இல்லாமல் ஒரு பொது சின்னம் கொடுக்க பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவே அவருக்கு வெற்றிதான்.

இவர்களுக்கு என்ன வரையறை? ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களா வேண்டாதவர்களா என்ற ஒரே வரையறைதான்.

தேசிய  மலர் தாமரை பாஜக வுக்கு தரப்பட்டது எப்படி? அவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள் .

கை சின்னம் காங்கிரசுக்கு. எல்லாருக்கும் இப்படி  எளிய சின்னம் கிடைக்குமா?

மிருகங்கள் முடியாது என்றால் யாணை பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்படி?  சிங்கம், குதிரை சின்னங்கள் கிடைக்கின்றனவே?

லாந்தர் சைக்கிள் இரட்டைப்பூ, கடிகாரம், சீப்பு, டெலிபோன், தீபம், தராசு, சங்கு, வில் அம்பு, கண்ணாடி, கலப்பை, கார், என்று ஏராளமான சின்னங்கள்.

இங்கு திமுகவும்  உதயசூரியனும் பிரிக்க முடியாதவை.

அதிமுகவும் இரட்டை இலையும் பிரிக்க முடியாதவை.

வாக்களிப்பவர்கள் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிப்பதில்லை.  வேட்பாளரையும் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள்.

தீவிரமான கட்சிப் பற்றுள்ளவர்கள் மட்டுமே சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.

ஆனால் தேர்தல் கமிஷன் எப்படி இருக்க வேண்டும்.? நடுநிலையாக இருக்க வேண்டுமல்லவா?

யார் எதைக் கேட்டாலும், மற்றவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லாதபோது இருந்தாலும் அதில் நியாயம் இல்லாதபோது கொடுக்க வேண்டியதுதானே தேர்தல்  கமிஷனின் வேலை.

தேர்தல் கமிஷன்  ஒருதலைப் பட்சமாக செயல்படுவது  ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. 

இப்படி பாகுபாடு பார்க்கும் தேர்தல் கமிஷன் தேர்தல்  முடியும் வரை இன்னும் என்னென்ன செய்யும் என்பதுதான் கவலைக்குரியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top