15 ரூபாய் கடனுக்கு வெட்டி சாய்க்கப்பட்ட தலித் தம்பதிகள்? பிராமண மளிகை வியாபாரியின் வெறிச்செயல்??!! உ. பி யில்.

Share

முலாயம் சிங்கின் தொகுதி. மைன்புரி .

தெருவில் ஆடிபிழைக்கும்  வகுப்பை சேர்ந்தவர்கள் பரத்சிங்கும் மம்தாவும்.    மாதாமாதம் அசோக் மிஸ்ரா என்ற மளிகை வியாபாரியிடம் பொருள்கள் வாங்கி வந்த வகையில் ரூபாய் பதினைந்து பாக்கி இருந்து அதை திருப்பிக் கேட்ட போது இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிரார்கள்.

கோபமடைந்த மிஸ்ரா வீட்டிற்கு போய் கோடரியை எடுத்து வந்து  இருவரையும் சரமாரியாக வெட்டி கொன்றிருக்கிறார்.

போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிரார்கள்.

இதற்காகவெல்லாமா  கொலை செய்வார்கள்?    கேட்கவே தலை சுற்றுகிறதே?

நம்ப முடியவில்லை என்னும் அளவுக்கு சமுதாயம் பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

ஆராயப் பட வேண்டிய சமுதாய பிரச்சினைகள் ஏராளம் .     முலாயம் தொகுதியிலேயே இப்படி என்றால் மற்ற தொகுதிகளில் எப்படி இருக்கும்.

வெட்கித் தலை குனிய வேண்டிய செய்தி.

This website uses cookies.