Connect with us

பசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகின்றன? பாஜக முதல்வர் பிதற்றல் பேச்சு!

cow-oxygen

மதம்

பசுக்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகின்றன? பாஜக முதல்வர் பிதற்றல் பேச்சு!

பசுக்களை புனிதப்படுத்துவதற்காக பாஜக வினர் என்னவெல்லாம் சொல்கிறார்கள்.?

இவர்கள் பேசுவது அறிவுடைமையா முட்டாள்தனமா என்று ஒரு விவாதமேடை நடத்தும் அளவு இருக்கிறது இவர்கள் பேசுகிற பேச்சு. 

அதுவும் ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா? அவர் மட்டுமல்ல. பல அமைச்சர்களும் இப்படித்தான் பேசுகிறார்கள். உயர்நீதி மன்ற நீதிபதியும் இப்படி பேசுகிறார். உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. எங்கே போகிறது நாடு?

உத்தரகாண்ட் முதல் அமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் சொன்ன ரத்தினக் கருத்துக்கள்.;

*   பசுமாடுகள் மட்டுமே ஆக்சிஜனை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

*   பசு மாட்டோடு நெருங்கி வாழ்ந்தால் காச நோய் கூட குணமாகிவிடும்.

அந்த மாநிலத்தின் விலங்குகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆரியாவும் இதே கருத்தை வெளியிடுகிறார்.

பிரக்யா சிங் தாகூர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் தனது புற்றுநோய் குணமானது கோமியத்தினால்தான் என்கிறார். ஒரு மருத்துவர்தான் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்ததை உறுதிபடுத்துகிறார்.

கோமியத்தை அஞ்சல் நிலையங்களில் விற்கும் வேலையையும் மத்திய அரசு செய்தது.

பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவ் முயற்சியில் கோமிய விற்பனையில் முயன்று தோல்வி அடைந்தது.

வாசுதேவ் தேவ்னானி என்ற ராஜஸ்தான் கல்வி அமைச்சர் இதே கருத்தை வலுவாக பதிவிடுகிறார்.

கொடுமை? ராஜஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதி மகேஷ் சந்திரா என்பவர் பசுவை தேசிய மிருகமாக அறிவிக்க கூறிவிட்டு பசு மட்டும்தான் ஆக்சிஜனை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று தீர்ப்பிலேயே குறிப்பிடுகிறார். 33 கடவுளர்கள் பசுவில் வசிக்கிறார்களாம். அதைவிட இன்னொரு கொடுமை ஆண் மயில் ப்ரம்மசாரியாம். பெண் மயில் மயிலின் கண்ணீரை குடித்தே கர்ப்பமாகுமாம். இதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவைகளா? 

         இதற்கெல்லாம் அவர்கள் எந்த ஆதாரத்தையும் காட்டியதாக தகவல் இல்லை. இப்படி மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவோர் மீது என்ன நடவடிக்கை?

ஆதாரம் இருந்தால் மக்கள் முன்னாள் சொல்லட்டுமே?

அறிவியல் பூர்வமாக வெளியிடப்பட்ட கருத்து வேறாக இருக்கிறது.

எல்லா மிருகங்களையும் போலவே பசுக்களும் ஆக்சிஜனை உட்கொண்டு பயன்படுத்தியது போக மீதத்துடன் கார்பன் டை ஆக்சைட் வாயுவை தான் வெளியிடுகின்றன. இது மனிதன் உள்ளிட்ட எல்லா மிருகங்களுக்கும் பொருந்தும். 

அதாவது 21% காற்றை உட்கொண்டால் அதில் 4-5% ஆக்சிஜனை மட்டும் உடல் பயன்படுத்துகிறது மீதத்தை கார்பன் டை ஆக்சைட் வாயுவோடு சேர்த்து  வெளியேற்றுகிறது.

ஏன் வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுகிறது என்பதற்கு வேறு சான்று தேவையா? எங்கே மூட நம்பிக்கை அதிகமோ அங்கே அவர்கள் வளரத்தான் செய்வார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top