Connect with us

அடக்குமுறையை கையில் எடுக்கும் மோடி அரசு வெற்றி பெற முடியுமா?

narendra-modi

இந்திய அரசியல்

அடக்குமுறையை கையில் எடுக்கும் மோடி அரசு வெற்றி பெற முடியுமா?

இடது சாரி சிந்தனையாளர் வக்கீல் சுதா பரத்வாஜ் ,
மாவோயிஸ்ட் ஆதரவாளர் வெர்ணன் கோன்சால்வாஸ் ,
பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா
அருண் பெரைரா, எழுத்தாளர் கவிஞர் வரவரராவ் இவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் .

அரசு நினைத்தால் எப்படி எல்லாம் எவரை எல்லாம் வழக்குப் போட்டு
அலைக்கழிக்கலாம் என்பதற்கு இவர்கள் மீது மகாராஷ்டிரா அரசு எடுத்திருக்கும் கைது நடவடிக்கை உதாரணம்.
கிட்டத் தட்ட அவசர நிலையை நினைவூட்டும் நடவடிக்கைகள்.
என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள் என்பதற்கு
அரசு வைத்திருக்கும் ஆதாரங்கள் நகைப்புக்குரியவை.

உச்ச நீதி மன்றமே இவர்களை சிறைக்கு அனுப்ப கூடாதென
வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
அறிவுஜீவிகளுக்கு சிறைக்கூடம் தான் தண்டனையா?
மாவோயிஸ்டுகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வில்லையா?
இடது சாரி – தலித் செயற்பாட்டாளர்கள் தேச துரோகிகள்
என்று முத்திரை குத்த பார்க்கிறது மத்திய அரசு.

பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க
இன்னும் என்னென்ன ஆயுதங்களை எடுப்பார்களோ தெரியவில்லை.
அவசர நிலை பிரகடனத்தால் அவதிப் பட்டவர்கள் ஜனசங்கத்தினர்
ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களே அறிவிக்கப் படாத அவசர நிலையை
உருவாக்கலாமா? ‘ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு இருந்தால்தான் அது
சரியான பாதையில் செல்வதாக இருக்கும்.

எதிர்ப்பு என்பது
குக்கரில் உள்ள சேப்டி வால்வ் போன்றது. வால்வ் இல்லையென்றால்
குக்கர் வெடித்து விடும் . எதிர்ப்பு குரல் கொடுப்பவர்களை ஒடுக்கினால்
அது ஜனநாயகத்துக்கு ஆபத்து ஆகிவிடும்.’ –
நீதிபதி தீபக் மிஸ்ரா சொன்ன வார்த்தைகள் இவை.
ஹிட்லர், முசோலினி , என்று எண்ணற்றோர்
சர்வாதிகார போக்கில் சென்று தோற்கவே செய்தார்கள்.
வென்றதாக வரலாறு இல்லை.
மோடி மட்டும் அதற்கு விதிவிலக்கு ஆகிவிடமுடியாது.
ஆனால் சர்வாதிகாரிகள் திருந்தியதாகவும் வரலாறு இல்லை.
மோடி வரலாறு படைப்பாரா? திருத்திக் கொள்வாரா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top