இந்திய அரசியல்

தமிழ்நாடு கேரளத்தில் முடங்கிப் போன கம்யுனிஸ்டுகள் ?!

Share

அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை கம்யுனிஸ்டு கட்சிகள் இழக்கின்றன.

மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் ஆட்சியில் இருந்தவரை அகில இந்திய கட்சி என்று கருதப்பட்டார்கள்.

ஆட்சியில் இல்லாமல் கூட ஒரு கட்சி உயிர்த் துடிப்புடன் இயங்க முடியும். அத்தகைய கொள்கை பலம் உள்ளவர்கள் கம்யுனிஸ்டுகள். அவர்கள் வலது இடது என்று பிரிந்து கிடப்பதே ஒரு பெரிய முரண்.

ரஷ்ய ஆதரவாளர்களாகவும் சீன ஆதரவாளர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் அந்த இரண்டு நாடுகளுமே தனியார் சொத்துரிமையை அங்கீகரித்து பொது உடைமை கொள்கையை நீர்த்துப் போக செய்து விட்டபின் இவர்கள் இன்னமும் பிரிந்து கிடப்பது எதற்காக?

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு கட்சி செயல் பட முடியாத நிலை உள்ளது. அது ஒன்றே கம்யுனிஸ்டுகளுக்கு ஆறுதல்.

இந்தியாவில் மார்க்சிஸ்டு கட்சிக்கு கேரளாவில் ஒருவரும் தமிழ்நாட்டில் இரண்டு  பேரும் இந்திய கம்யுனிஸ்டு கட்சிக்கு தமிழ்நாட்டில் இரண்டு பேரும் ஆக மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் தான் கம்யுனிஸ்டுகளின் பிரதிநிதிகள்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதனால் நான்கு பேர் கிடைத்தார்கள்.

மேற்கு வங்காளத்திலும் திரிபுரவிலும் இரு இடத்தை கூட இவர்களால் பெற்ற முடியவில்லை.

அரசியலில் சாதி மத ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க கம்யுனிஸ்டுகள் அவசியம் தேவை.

கம்யுனிஸ்டுகள் செல்வாக்கு இழப்பது என்பது அவர்களுக்கான இழப்பல்ல. நாட்டுக்குத்தான் இழப்பு. 

This website uses cookies.