Connect with us

சொந்த சாதி பெண்களையே ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட முத்தரையர் இளைஞர்கள்??!!

ponnamaravathi

மதம்

சொந்த சாதி பெண்களையே ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட முத்தரையர் இளைஞர்கள்??!!

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து நாமும் பொதுமேடையில் எழுதியிருந்தோம்.

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து நாமும் பொதுமேடையில் எழுதியிருந்தோம்.

முத்தரையர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படும் வகையில் இருந்த அந்த ஆடியோ பெருத்த கிளர்ச்சிக்கு வித்திட்டு பல போராட்டங்களை அந்த அப்பாவி மக்கள் முன்னெடுத்தனர்.

ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல் வாகனங்கள் தாக்கப்பட்டன. 13 போலீசார் காயமடைந்தனர்.

இத்தனை கலவரத்துக்கும் மத்தியில் எந்த இரண்டு சமூகத்துக்கும் இடையே மோதல் எதுவும் ஏற்படாதது மட்டுமே ஆறுதல்.

காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டதில் உண்மை வெளிவந்தது. மஞ்சவயல் கரிசல்காடு செல்வகுமார் சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை பட்டுகோட்டை வசந்த் என்பவர் தூண்டிவிட்டு நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு சிங்கப்பூரில் இருந்து செல்வகுமார் சர்ச்சைக்குரிய அவதூறு ஆடியோவை பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவு செய்ததும் அதை சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவர் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவவிட்டதும் தெரியவந்தது .

இப்போது காவல் தனிப்படை செல்வகுமாரையும் வசந்த்தையும் கைது செய்து  விசாரித்து வருகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் அந்த இருவரும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான். தங்கள் சமூகத்து பெண்களைப்பற்றி அவதூறாக பேசி சொந்த சமூகத்தையே இழிவுபடுத்த அவர்கள் சொன்ன காரணம்தான் தமிழ் சமூகம் சாதிப்பேயின் பிடியில் எவ்வளவு அழுத்தமாக அடிமைப்பட்டு கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. தனது சமுதாயத்தில் ஒரு பற்று உணர்வை ஏற்படுத்த வேண்டிதான் இந்த பதிவை வெளியிட்டார்களாம். 

ஏற்கனெவே அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்னையில் முக்குலத்தோர்-முத்தரையர் பிரச்னை ஏற்பட்டு பின்னர் அமைதி ஏற்பட்டது.

வேற்றுசமூகத்து ஆட்கள் நம் சமூக பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்றால் தன் சாதிக்காரர்கள் ஒன்று திரண்டு சாதி ஒற்றுமையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எதனால் உருவானது.? முன்பே புரையோடிப் போயிருக்கும் சாதிப்பகைமை.

இந்த இருவருக்கும் தரப்படும் கடுமையான தண்டனைதான் இனி எவருக்கும் இத்தகைய இழி செயலில் ஈடுபட திட்டமிடுவோருக்கு தரப்படும் எச்சரிக்கையாக இருக்கும் .

               போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் இனி எவரும் இப்படி செய்தால் கவனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top