Connect with us

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு மத்திய அரசு அனுமதி??!!

இந்திய அரசியல்

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு மத்திய அரசு அனுமதி??!!

ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்து
13 பேர் இறந்த நிலையிலும்,
ஆலையை மூடி உத்தரவிட்ட நிலையிலும் ,
மீண்டும் திறக்க அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம்
தன் முயற்சிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் ஹைட்ரோ கார்பன் எடுக்க
டெல்டா பகுதியில்
வேதாந்தா நிறுவனத்திற்கு மரக்காணம்- கடலூர் மற்றும் பரங்கிபேட்டை-வேளாங்கண்ணி
என்று இரண்டு பகுதிகளிலும்
குள்ளஞ்சாவடி – தரங்கம்பாடி என்ற பகுதியில்
ஓ ன் ஜி சி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்து
உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 40 எண்ணெய் வள பகுதிகளை
வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு கொடுக்க இருக்கிறதாம்.
மத்திய அரசின் எண்ணெய் வளத்தை சுரண்டும் கொள்கை
நாட்டை எங்கே கொண்டு விடப் போகிறதோ தெரியவில்லை.
1993 ல் தொடங்கப் பட்ட ஹைட்ரோ கார்பன் இயக்ககம்
( Directorate General of Hydrocarbons)
நாட்டில் இன்னும் தோண்டப் படாமல் இருக்கும் எண்ணெய் வளங்களை எல்லாம்
சுரண்டி எடுப்பதில் தீவிரமாக இருக்கிறது.
எண்ணெய் தேவைதான் . அத்தியாவசியப் பொருள்தான்.
தற்போது இந்திய தனது எண்ணெய் தேவைகளில்
81 % த்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. .

அதை நரேந்திர மோடியின் அரசு
67 % ஆக 2022 ம் ஆண்டுக்குள்ளும்
50 % ஆக 2030 ம் ஆண்டுக்குள்ளும்
ஆக குறைக்க திட்டமிடுகிறது.
எல்லாம் சரி. இந்த திட்டத்தில் பெரும்பங்கு
ஆற்றப் போகிறவர்கள் தனியார் முதலாளிகள்.
ஓ ன் ஜி சி நிறுவனமே குறிப்பிட்ட பங்குதான் ஆற்றப் போகிறது.
தனியார் நாட்டு நன்மையை முன்னிறுத்துவார்களா ?
தங்கள் லாபத்தை பெருக்குவார்களா?
இந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படும்போது
அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுமா என்று ஆய்வு செய்ய
விவசாயிகள் பாதிக்கப் படுவார்களா என்பதை ஆய்வு செய்ய
சட்டத்தில் இடம் இருந்தாலும் மீறித்தான் செயல் படுகிறார்கள்.
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்கும்
அவசியம் இல்லை என்று
சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறதே .

எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் அவசியம் என்ன
என்பதை ஏன் இந்திய அரசு ஆராயவில்லை.
லாபத்தை விட நட்டம்தான் தான் அதிகம் இருக்கும்.
அதிலும் குறிப்பாக நம் நாட்டு விவசாயிகள் பொதுமக்கள் தான்
அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
நம் மக்களை பாதிக்க வைத்து ஒரு திட்டத்தை ஏன் அமுல் படத்த வேண்டும்?
பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கும்
விவசாயம் செழிக்கும் பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கும்
வேறுபாடு இல்லையா?
தூத்துக்குடிப் பகுதிகளில் மக்கள் அச்சம் அடைந்தது பாதுகாப்பு கருதி
டெல்டா பகுதியின் அச்சம் வாழ்வாதாரம் போய் விடுமே என்பது
நமக்கும் ஒரு அரசு இருக்கிறது. அது நமது அரசுதான் .

விழிப்புணர்வு ஊட்ட மக்களை திரட்ட ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?
சொல்வது தவறு என்றால் நீங்கள் நியாயப் படுத்துங்கள்
இந்த அடக்குமுறைதான் மக்களின் அச்சத்தை அதிகமாக்குகிறது.
மாநில அரசு உறுதியாக நின்றால் மத்திய அரசு அடக்க முடியாது
நம் காவல் துறை நம் மக்களை அடக்குவதா?
தவறான உத்தரவுக்கு கட்டுப் பட மாட்டோம் என்ற
ஜெயப்பிரகாஷ் நாராயணின் முழுப்புரட்சி
உதிக்கும் நாளே நன்னாள் !!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top