இந்திய அரசியல்

அஞ்சல் துறை தேர்வை ரத்து செய்து பணிந்த மத்திய அரசு?!

Share

அஞ்சல் துறை தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்வித்தாள்களை வழங்கி நடத்தியது மத்திய அரசு.

திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.

ஆச்சரியமாக திமுகவுடன் சேர்ந்து அதிமுக எம்பிக்களும் மேலவையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தினர்.

வழக்கும் தாக்கலாகி முடிவுகளை அறிவிக்க தடை ஏற்பட்டது.

இந்நிலையில் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப் படுவதாகவும் இனி தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப் படும் என்றும் அறிவித்தார்.

எல்லா கட்சியினரும் நன்றி தெரிவித்தனர்.

இந்த முடிவுக்கு தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பே முக்கிய காரணம். ஆக இதர மாநிலங்களின் உரிமைகளையும் தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள்தான் பாதுகாக்கின்றன.

ஏதோ இப்போதைக்கு ரத்து செய்து விட்டார்களே என்று நினைக்கக் கூடாது. உண்மையில் அந்த முடிவை எடுத்து அமுல்படுத்திய யார் மீதாவது பொறுப்பை சுமத்தி உரிய தண்டனை வழங்கி இருந்தால் மட்டும்தான் அவர்கள் இதில்  உண்மையில் அக்கறை காட்டுவதாக ஏற்றுக் கொள்ள முடியும்.

அதில்லாமல் வெறுமனே ரத்து மட்டும் செய்திருப்பதால் மீண்டும் அடுத்த முயற்சியை எப்போது வேண்டுமானாலும் கையில் எடுப்பார்கள் என்றுதான் பொருள்

This website uses cookies.