நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ தொடர் அடம்! உயர் நீதி மன்ற தீர்ப்பை ஏற்க மாட்டார்களாம்?

Share

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு , தமிழில் வினாத்தாள் மொழிபெயர்ப்பு குளறுபடியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால்  அவர்களுக்கு   49 கேள்விகளுக்கு  தலா    4 மதிப்பெண் வீதம்     196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நியாய உணர்வு இருந்தால் அதை அமுல் படுத்த வேண்டிய சி பி எஸ் இ இதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல இருக்கிறது.

தமிழில் எழுதுபவர்களுக்கு தமிழில்தானே கேள்வி தாள் தரவேண்டும்.   அதற்கு ஆங்கில கேள்விதாளையும் கொடுத்து தமிழில் தவறாக இருந்தால் ஆங்கில கேள்வித் தாளே  பொருந்தும் என சி பி எஸ் இ வாதிடுகிறது.

தர வரிசை பட்டியலை திருத்த மறுத்து இந்த மேல்முறையீடு.

இதற்கிடையே ஆங்கிலத்தில் எழுதி இடம் வாங்கிய மாணவர் ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனு செய்திருக்கிறார்.

உச்ச நீதி மன்றம் என்ன செய்ய போகிறது என்பதை தாண்டி சிபீஎஸ் இ தான் நினைத்ததை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள்.

எங்களை விட்டு விடுங்கள் நாங்கள்  எங்கள் கல்வியை பார்த்துக் கொள்கிறோம் என்று அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

கல்வியை உடனடியாக மாநிலப்  பட்டியலுக்கு மாற்ற வேண்டிய போராட்டத்தை தமிழ் சமுதாயம் கையில் எடுக்க வேண்டும்.

கல்வி வணிகப் பொருளாக மாற்றப் படுவதை எதிர்த்தும்  அனைவருக்கும் கல்வி அரசு செலவில் கிடைப்பதை உறுதிபடுத்தவும் அனைத்துக்  கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.

இதிலாவது கட்சிகள் அரசியல் செய்யாமல் ஒன்றிணைவார்களா?

This website uses cookies.