இந்திய அரசியல்

மோடி அமைச்சரவையில் பார்ப்பன மேல்சாதிகளின் ஆதிக்கம் ??!!

Share

பாஜக என்பது மேல்சாதி மற்றும் பார்ப்பனர்களின் கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

மற்ற எல்லாருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் இடம் கொடுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் அதிக அளவில் இடம் தந்திருக்கிறார்கள். அதுவும் கேபினட் அந்தஸ்தில். கேட்டால் நாங்கள் சாதி பார்ப்பதில்லை. தகுதி பார்த்துதான் இடம் கொடுப்போம் என்பார்கள்.

மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லாமல் சொல்வார்கள்.

58 பேர் கொண்ட அமைச்சரவையில் 32 பேர் பார்ப்பன மற்றும் மேல்சாதிகளை சேர்ந்தவர்கள். 13 பேர் இதர பிற்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். 

9 பார்ப்பனர்கள் – நிதின் கட்கரி, மகேந்திரா நாத் பாண்டே, பிரகலாத் ஜோஷி, பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷ் வர்தன், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ரமேஷ் போக்ரியால்,பிரதாப் சந்திர சாரங்கி ( ஓடிசாவை சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மலை வாழ் மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்- ஸ்வயம் சேவகர் )

3 தாக்குர் இனத்தோர் – ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் தாக்கூர், நரேந்திர சிங் தோமர்

13 இதர பிற்பட்டோர்

6 பட்டியல் வகுப்பை சேர்ந்தோர்

4 பட்டியல் இனத்தை சேர்ந்தோர்

2 சீக்கியர்கள் – ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் பூரி

1 முஸ்லிம் – முக்தர் அப்பாஸ் நக்வி

அதுவும் முக்கிய இலாகாக்களை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் எல்லா சமுதாய மக்களின் எதிர்பார்ப்புக் களையும் பூர்த்தி செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்த ஆதிக்கம் குறைய  வாய்ப்பே இல்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். எல்லாவற்றையும் தாங்களே ஆக்கிரமித்துக் கொள்கிறோமே என்று கொஞ்சம்கூட வெட்கப்பட மாட்டார்கள். அதற்கு ஏதாவது சாக்கு சொல்லி சமாளிப்பார்கள.

சுட்டிக் காட்டுகிறவர்களை சாதிய வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள். சாதி பார்த்து அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறவர்கள் மற்றவர்களை சாதியவாதிகள் என்று குற்றம் சுமத்துவது என்ன ஒரு  கொடுமை?

This website uses cookies.