Latest News
மதத்தின் பேரால் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம்!! ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தீர்ப்பு !! தமிழ்நாட்டில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நிறுத்துவது எப்போது???
இன்னமும் தலையில் தேங்காய் உடைக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இன்னமும் உடன்கட்டை ஏறுவதை கூட மதத்தின் பேரால் நியாயப் படுத்துவோர் இருக்கலாம்.மதத்தின் பேரால் தொடரும் அர்த்தமற்ற சடங்குகளை நிறுத்தும் நேரம் வந்து விட்டது.நேபாளத்தில் ஒரே நேரத்தில் 5000 எருமைகளை கொன்று குவிக்கும் மத சடங்கு நிகழ்ச்சியை அந்த நாட்டு அரசு சமீபத்தில் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். அரசு தலையிடுமா? அல்லது பக்தர்களுக்கு பயந்து ஒதுங்குமா???