Connect with us

பகவத் கீதை தேசிய நூலா? சுஷ்மாவின் அதிரடி!

Latest News

பகவத் கீதை தேசிய நூலா? சுஷ்மாவின் அதிரடி!


பகவத் கீதை தேசிய நூலா? சுஷ்மாவின் அதிரடி!
ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட ஐ.நா. அறிவிக்க இருப்பதை தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நூற்று எழுபது நாடுகள் மோடியின் அழைப்பை ஏற்று ஆதரவு அளித்ததை குறிப்பிட்டார்.   
அத்துடன் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.     பிரதமர் மோடிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த எந்த வாய்ப்பையும் இவர்கள் தவற விடமாட்டார்கள் போல் இருக்கிறது.
அரசியல் சட்டம் மத சார்பற்றது.    மத சார்பின்மையை வலியுறுத்துகிறது. மத சார்பற்ற அரசு எப்படி ஒரு பிரிவினரின் புனித நூலை எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த முடியும்?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு மற்றுமொரு மத்திய அமைச்சர் நிரஞ்சன் சாத்வி இப்படித்தான் ராமரின் பிள்ளைகள் ஆள வேண்டுமா?  
 முறைகேடாக பிறந்தவர்கள் ஆள வேண்டுமா என்று கேட்டு நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்தார். பிறகு மன்னிப்பு கேட்டும் இன்னும் அந்த பிரச்னை தீர்ந்த பாடில்லை.   அதற்குள் மீண்டும் ஒரு பிரச்னையை சுஷ்மா கிளப்புவதன் நோக்கம் என்ன?
ஆட்சியில் கவனம் செலுத்துங்கள். ஆட்டுவிக்க முயற்சிக்க வேண்டாம்.. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top