Connect with us

சரத்குமார்- ராதாரவி மோசடி முயற்சி வெற்றி பெறுமா? அரசியலில்தான் பகல் கொள்ளை என்றால் நடிகர் சங்கத்திலுமா ?

Latest News

சரத்குமார்- ராதாரவி மோசடி முயற்சி வெற்றி பெறுமா? அரசியலில்தான் பகல் கொள்ளை என்றால் நடிகர் சங்கத்திலுமா ?

                                      சென்னை மாநகரத்தின் நடுவில் 68 ஆயிரம் சதுர அடி இடத்தில் ஒரு கட்டடம் கட்டக் கூட முடியாமல் நடிகர் சங்கம் யாரோ ஒருவரிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வெறும்  24  லட்சம்  மாதம் வருமானம் என்றும் தனக்கு என கொஞ்சம் இடம் மட்டும் போதும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை எல்லாரும் ஏன் என்று கூட கேட்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அதுவும் வழக்கை வாபஸ் பெற்றால்தான் எதுவும் பேச முடியும் என்றும் பட்டப் பகலில் விதண்டா வாதம் செய்யும் சரத் குமார் ஒரு அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். 
              நடிகர்கள் பொதுமக்களுக்கு சொந்தமானவர்கள்.   இது சங்கத்தின் பிரச்சினை என்று ஒதுக்கி விட முடியாது. பொது மக்கள் கருத்து சங்கத்தில் பிரதிபலிக்க வேண்டும்.     நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதன் விபரங்கள் பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.
                    கட்டடம் கட்ட நடிகர்களே நிதி தர , திரட்ட தயாராக இருக்கும்போது ஏன் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு சரத் குமாரும் ராதாரவியும் பதில் சொல்லத்தான் வேண்டும்.       
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top