இந்திய அரசியல்

தேர்தலுக்கு முன் ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுக்கும் பாஜக ??!!

Share

நானூறு ஆண்டுகளாய் இருந்து வந்த அயோத்தியில் ராமர் கோவிலா பாபர் மசூதியா என்ற பிரச்னையில் 1992-ல் பல லட்சம் கர சேவகர்களை கூட்டி வைத்து இருபதே நிமிடத்தில் மசூதியை தரை மட்டமாக்கி விட முடிந்தது சங்கப் பரிவார சக்திகளால்.

ஆனால் நிலுவையில் இருப்பது இடம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கு.

அதுவும் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. மூன்று பேருக்கு பங்கு போட்டுக் கொடுத்த உயர் நீதி மன்ற தீர்ப்பு நிலைக்குமா அல்லது புது தீர்ப்பு வருமா என்பது இறுதி விசாரணையை எப்போது எடுத்துக் கொள்வது என்று ஜனவரி மாதம்தான் தெரியவரும்.

அதற்குள் சங்க பரிவாரங்கள் இரண்டு லட்சம் பேர் அயோத்தியாவில் கூடி ஒரு தர்ம சபையை கூட்டி பேசியிருக்கிறார்கள்.

தீர்மானம் ஏதும் போட்டதாக தெரியவில்லை. வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கும்போது என்ன தீர்மானம் போட முடியும்?

தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லையென்றால் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் பரிவாரங்கள் இல்லை என்பது மட்டும் உறுதி.

கலவரம் செய்து  குறுகிய நேரத்தில் அழிக்க முடியும். கட்ட முடியுமா?

பல மாதங்கள் ஆகும் என்றால் அதுவரை உச்சநீதி மன்றம் பார்த்துக்  கொண்டு இருக்குமா?

நாட்டில் சட்டம் கோலோச்சுமா ? தடி எடுத்த கூட்டம் கோலோச்சுமா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அயோத்தியா வழக்கை பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை எடுத்துக் கொள்ளாதீர்கள்  இல்லையென்றால் உங்கள் மீது ராஜத்ரோக ( impeachment ) குற்றம் சுமத்தி பதவி இழக்க வைப்போம் என்று காங்கிரசின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிபதிகளை மிரட்டுவதாக மோடி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆனால் இப்போது தர்மசபை  கூடியது எதற்காக யாரை மிரட்ட என்பதை மட்டும் சொல்லவில்லை.

மீண்டும் ஜனவரியில் கூடுவார்களாம்.    மத்தியில்  மட்டுமல்ல மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்து கொண்டே இத்தகைய அத்துமீறல்களை பா ஜ க செய்யுமானால் அவர்கள் எதைத்தான் செய்ய மாட்டார்கள்?

வளர்ச்சி என்று பேசியதெல்லாம் மக்களிடம் எடுபடாது என்பதால் மீண்டும் ராமருக்கு திரும்பி இருக்கிறார்கள் மதவாதிகள்.

மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

This website uses cookies.