இந்திய அரசியல்

பாஜகவின் அடுத்த ஆயுதம்; ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி ???!!!

Share

ஆள வந்திருக்கும் பிரதமர் மோடி ஆட்சியை மேம்படுத்தும் வேலையை விட்டு விட்டு வேண்டாத வேலைகளில் கவனத்தை செலுத்தி பிரச்னைகளை திசை திருப்பும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் ஒரேநாடு ஒரேதேர்தல் திட்டம்.

இது ஒன்றும் புதிதும் அல்ல.1983 தேர்தல் கமிஷன் பரிந்துரைத்து மீண்டும் 1999  வாஜ்பாய் அரசால் நியமிக்கப்பட்ட ஜீவன் ரெட்டி கமிஷன் பரிந்துரைத்த 170வது அறிக்கையில் சொல்லப்பட்டவைதான்.

ஆனால் அதில் உள்ள பல சிக்கல்களுக்கு விடை கிடைக்காத நிலையில்தான் அந்த பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

இப்போது தூசி தட்டி அவற்றை மீண்டும் பரிசீலிக்க அவசியம் என்ன?

காங்கிரஸ் அல்லாத பாரதம் அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த கட்சி பாஜக.

ஓரளவு அதை முடித்துவிட்டார்கள். தனி பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

கம்யுனிசம் ஆட்சி நடத்தும் சீனாவில் ஒரே கட்சிதான். அது கம்யுனிஸ்டு கட்சி.

அதேபோல் இந்து மதவாதம் ஆட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சிதான். அது பாஜக என்று ஆக்க திட்டம் இடுகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்டத்தை திருத்தாமல் ஒரே தேர்தல் முடியாது என்று பலரும் கருத்து சொல்லிவிட்டார்கள்.

1952, 1957, 1962, 1967 இந்த நான்கு ஆண்டுகளில்தான் பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல்கள் நடைபெற்றன. அதற்குப் பிறகு எல்லாம் மாறி விட்டன.

பெரும்பான்மை இழந்த கட்சி ஆட்சியில் தொடர முடியாமல் போனால் சிறிது காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கலாம். பின்பு பொதுத்தேர்தல் நடத்தி தானே ஆக வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வரை குடி அரசுத் தலைவர் ஆட்சியை  நீடித்தால் அது ஜனநாயகமா ?

செலவினத்தை மிச்சப்படுத்த என்ற கேள்வியே தவறு. மக்களாட்சியை தேர்ந்து எடுக்க செலவு ஒரு தடையாக இருக்க முடியாது.

சர்வாதிகாரத்தை நோக்கி பாஜக அரசு பீடு நடை போடுகிறது. வெற்றி காண்பது மட்டும் அரிது. ஏன் என்றால் எந்த சர்வாதிகாரமும் நீடித்தது இல்லை.

This website uses cookies.