Connect with us

பெரிய கோவில் கல்வெட்டுகளை மாற்ற முயற்சியா? அதிகாரிகள் ஏன் அறிக்கை தரவில்லை?

thanjavur-big-temple

மதம்

பெரிய கோவில் கல்வெட்டுகளை மாற்ற முயற்சியா? அதிகாரிகள் ஏன் அறிக்கை தரவில்லை?

பெரிய கோவில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி கல்வெட்டுகளை பொருத்தி வருவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்து தமிழர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை எழுப்பிவிட்டது.இதற்கு இந்து தமிழ் மட்டும் ஒரு விளக்க செய்தி வெளியிட்டது.தமிழக நுண்ணறிவுப் போலிசும், உளவுப் பிரிவு போலிசும் கோவிலுக்கு வந்து அங்குள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டதுடன் அவற்றை படமாவும் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.

பெரிய கோவில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி கல்வெட்டுகளை பொருத்தி வருவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்து தமிழர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை எழுப்பிவிட்டது.

இதற்கு இந்து தமிழ் மட்டும் ஒரு விளக்க செய்தி வெளியிட்டது.

தமிழக நுண்ணறிவுப் போலிசும், உளவுப் பிரிவு போலிசும் கோவிலுக்கு வந்து அங்குள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டதுடன் அவற்றை படமாவும் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.

பெரிய கோயில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது. அதன் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார்.

“ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் பணியாளர்கள் விபரம் கொடுக்கப்பட்ட தானங்கள், கோவில் நிர்வாகம், ஆட்சி முறை, பாதுகாப்பு முதலான பல தகவல்கள் அனைத்தும் கோவில் முழுவதும் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனைத்தும் தமிழ் மொழியில்தான் உள்ளன. மராட்டியர் காலத்தில் திருச்சுற்று மாளிகையின் சுவரில் மராத்தி மொழியின் தேவநாகரி எழுத்துக்களை கொண்டு கோவில் திருப்பணிகள் தொடர்பாக கல்வெட்டுகளை பொறித்து வைத்திருந்தனர்.

இவற்றைத்தான் தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி இந்தி மொழி கல்வெட்டுகளை பதிப்பதாக சமூக வலைத்தளங்கள் பதிவிட்டு வருகின்றன. இது தவறு. திருச்சுற்று மாளிகையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் வாசகங்கள் அடங்கிய கருங்கற்கள் அனைத்தும் கோவிலின் கிரிவலப் பாதையை சீரமைத்தபோது பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கோவிலின் தென் மேற்கு பகுதியில் பூட்டிய அறையில் வைத்துள்ளோம்.

இங்கேதான் சந்தேகம் வலுக்கிறது. வலைதள புகைப்படத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற கல்வெட்டுகள் வெளியில்தான் கிடக்கின்றன. அவை பூட்டிய அறையில் இருந்தால் எப்படி வெளியில் கிடக்கும்?

மராத்திக்கும் இந்திக்கும் உள்ள வேறுபாடு எல்லாருக்கும் தெரியாது. ஆனால் தொல்லியல் துறைக்கு தெரியும் அல்லவா? கிரிவலப் பாதையை சீரமைத்தபோது  கிடைத்தது என்றால் அதன் கால விபரம் என்ன? அது அப்போதே வெளியிடப்பட்டதா? அது பற்றி வேறு ஆவணங்கள் உள்ளனவா இல்லையா? தொல்லியல் துறை அல்லாமல் இந்து அறநிலைய  துறையின் அதிகாரிகள் யாரும் இல்லையா? ஏன் பொறுப்பான அதிகாரிகள் எவரும் எழுத்து பூர்வமான விளக்கம் தர முன்வரவில்லை.?

பெரியகோவிலில் ராஜராஜ சோழனால் பொறிக்கப்பட்ட 64 கல்வெட்டுகளும்  ராஜேந்திர சோழனால் பொறிக்கப்பட்ட 21 கல்வெட்டுகளும் இரண்டாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் காலங்களில் தலா ஒரு கல்வெட்டும் பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும், விஜயநகர நாயக்கர் கால கல்வெட்டுகள் நான்கும், மராட்டியர் கால கல்வெட்டுகள் நான்கும் உள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கே திடீரென்று மராட்டியர் கால கல்வெட்டுகள் பூமிக்கடியில் இருந்து கிடைக்கப் பெற்றவை என்று சொல்லும்போதுதான் பிரச்னை எழுகிறது.  கல்வெட்டு பொறித்தவர்கள் பூமிக்கடியிலா புதைப்பார்கள்? 

                அவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு கோவிலில் திடீர் என்று யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் பொறுத்திவிட முடியுமா? அது கோவிலின் தொல்லியல் தன்மையை பாதிப்பதாக அமையாதா? 

                பொறுப்புள்ள அதிகாரிகள் முன்வந்து இந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தால் தவிர வரலாற்றை மராட்டியர்களுக்கு ஆதரவாக திருப்ப சதி முயற்சியாகத்தான் இதை மக்கள் கருதுவார்கள்.

ஏற்கெனெவே பெரியகோவில் நிர்வாகத்தில் மராட்டிய மன்னர் வாரிசுகளுக்கு இன்னமும் கொடுக்கப்படும் உரிமைகள் குறித்து பெருத்த ஆட்சேபணைகள் இருந்து வரும் நிலையில் இத்தகைய முயற்சிகள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிய மாட்டார்களா?  

சோழர்கள் வலு குன்றிய பின் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் சிதறி நின்றார்கள்.    அதனால் மராட்டியர், நாயக்கர், நவாபுகள், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என்று பல இனத்தார்களும் இடையில் ஒரு ஐநூறு ஆண்டுகள் தமிழர்களை ஆண்டு விட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியை விடவா மற்றவர் வலுக் கொண்டவர்? காலம் சென்றிருந்தால் மற்றவர் ஆட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மாற்றப் பட்டிருக்கும்.

எனவே அதையே இந்த மக்களாட்சி காலத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு நியாயமுமில்லை.

பொறுப்புள்ள அதிகாரிகள் அறிக்கை தந்து மக்களுக்கு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றுதான் பொதுமேடை கேட்டுக் கொள்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top