மதம்

கோவில் குருக்களுக்கு உதவித்துகையும் தர வேண்டும், காணிக்கை தடையும் வேண்டும்!

Share

இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36000 கோவில்களில் பணி புரியும் 10  லட்சம்  சிவாசாரியார்கள் பட்டாச்சார்யர்கள்  கொரொனா தொற்றைத் தடுக்க ஏப்ரல்  14 ம் தேதி வரை கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் பாதித்துள்ளது .அவர்களுக்கு  மாத சம்பளம் இல்லையாம். பக்தர்கள் வழங்கும் காணிக்கையே முக்கிய வருவாய் .

எனவே எங்களுக்கு மாதாந்திர உதவித்துகை வேண்டும். இதுதான் அகில இந்திய சைவ சிவாச்சார்யார்கள் செவ்வா சங்கத்  துணை  தலைவர் சிவசங்கர் சர்மாவின் கோரிக்கை.

சம்பளமே இல்லாமலா வேலை பார்க்கிறார்கள் அர்ச்சகர்கள். பின் எப்படி தங்கள் குடும்பத்தை நடதுகிறார்கள்?

இறைப்பணி செய்யும் அத்தனை பெரும் பார்ப்பனர்கள்.அதில் எங்களுக்கு பங்கு கொடுங்கள் என்று கேட்டால் மறுக்கிறாகள். நாங்களேதான் செய்வோம் என்கிறார்கள்.

கிராமக் கோவில்  அர்ச்சர்களுக்கு  பூசாரிகள்  என்று பெயர் சூட்டி அவர்களை தரம் தாழ்த்தி வருகிறார்கள். கிராமக் கோவில்களில் இருக்கும் சாமிகள் சிறு தெய்வங்களாம்.

இவர்களுக்கு அரசு எப்படி உதவ முடியும்?

இறைப்பணி செய்யும் எல்லாருக்கும் மாத சம்பளம் தர வேண்டும். அதுவும் அவர்களின் குடும்பத்தை காப்பாற்றும்   அளவு போதுமானதாக  இருக்க வேண்டும். அதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.  ஆனால் அதில் எல்லாருக்கும் பங்கு வேண்டும்.

தனியுரிமை என்பது ஒழிக்கப் பட வேண்டும்.

தட்டில் காணிக்கை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்  பட வேண்டும். மாதம் 25000-50000 வரை சம்பளம் கொடுத்தால் ஏன் காணிக்கை ?   பக்தர்கள் அனைவரும் தங்கள்  காணிக்கைகளை உண்டியலில்தான் செலுத்த வேண்டும். பெரும்   துகையாக இருந்தால் அலுவலகத்தில் செலுத்தி ரசீது  பெற வேண்டும். 

அர்ச்சனை செய்வது அவர்களின் கடமை. சம்பளம் தந்தால் பிறகு எதற்கு கட்டணத்தில் பங்கு?

சன்னதியில் நடக்கும் அனைத்தையும் சிசிடிவி பதிவில் ஆவணப் படுத்த வேண்டும்.

கோவில் பணியாளர்களுக்கு இடையே சம்பள விகிதத்தில் பெருத்த வேறுபாடு  இருக்கக் கூடாது. எல்லாரும்தான் இறைப்பணியில் பங்கு  பெறுகிறார்கள். அதில் ஏன் பெருத்த வேறுபாடு ?

இந்த சீர்திருத்தங்களுக்கு சிவாச்சார்யார்கள் உடன்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை  அரசு செய்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்காது.

This website uses cookies.