வெளிநாடு சென்று கொரொனாவைக் கொண்டு வந்த மதுரைகோவில் பட்டர்..

வெளிநாடு சென்று கொரொனாவைக் கொண்டு வந்த மதுரைகோவில் பட்டர்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் ஒருவரின் தாயார் கொரொனாவால் இறந்தது  வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பட்டர்  வெளிநாடு சென்று  திரும்பியவராம். ஆனால் அதை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாராம். அதனால் கோயில் முழுதும் அதிகாரிகள் மருந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் அவரும் அவர் குடும்பத்தினரும் நோயின் பாதிப்பில் இருந்து  மீள விழைகிறோம்.

ஆனால் பட்டர்  மீது நடவடிக்கை கோரி இந்து இயக்கத்தவர்கள் குரல் எழுப்புவார்களா ? டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த முஸ்லீம்கள் கொரொனாவை பரப்பியதாக மதசாயம் பூசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள் இப்போது அமைதி காப்பதன் பொருள் என்ன?

இனிமேலாவது கொரொனாவிற்கு மதசாயம் பூச கூடாது என்பதை இந்த சம்பவம் ஏற்படுத்தினால் நல்லது.