Connect with us

ஆராய்ச்சி மாணவி சோபியா கைது; தமிழிசையின் சகிப்பின்மையும் ஆணவமும்???!!!

தமிழக அரசியல்

ஆராய்ச்சி மாணவி சோபியா கைது; தமிழிசையின் சகிப்பின்மையும் ஆணவமும்???!!!

கனடாவில் பயிற்சி பெரும் ஆராய்ச்சி மாணவி சோபியா
தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும்போது தமிழிசையும் வந்திருக்கிறார்
‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக ‘ என்று முழக்கம் எழுப்பிருக்கிறார்
விமானத்தில் வேறு எந்த பயணியும் ஆட்சேபிக்க வில்லை
விமான பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை
தமிழிசை தமிழக பா ஜ க தலைவர்- குமரி அனந்தன் மகள்
வசந்த குமாரின் அண்ணன் மகள் – இவர்கள் எல்லாம் காங்கிரஸ்
மாணவி சோபியா முழக்கத்தை தவிர்த்திருக்கலாம் – அது வேறு
இவருக்கு சகிப்புத்தன்மை வேண்டாமா ?

மத்தியில் ஆட்சி புரியும் மமதை தலையில் ஏறி விட்டதா? புகார் கொடுக்கிறார்
எடப்பாடியின் காவல் துறை மாணவியை கைது செய்து
சிறையில் அடைக்கிறது- அவர் பிணையில் வெளியில் வருகிறார்
தமிழிசை மீது சொபியாவின் தந்தை தங்கள் மீது தாக்குதல்
என புகார் கொடுக்கிரார் – நடவடிக்கை ஏதும் இல்லை ?!
சோபியா தலித் என்பதால் பிரச்னை வெடிக்கிறது
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வலைத்தளங்கள்
தமிழிசைக்கு எதிரான பதிவுகளால் நிறைகின்றன
இதெல்லாம் தேவையா தமிழிசை?
உங்களுக்கு பெருமை சேர்க்க கூடியவையா நடப்பவை?
அறிவுரை கூற கூட யாரும் இல்லையா?

பா ஜ க வில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதாரை
சுயநலத்திற்காக காட்டிக் கொடுப்பவர்கள் என்றுதான்
தமிழ்ச்சமூகம் பட்டம் கட்டி வைத்திருக்கிறது.
அல்லது தவறாக வழி தவறி சென்றவர்கள்
அல்லது இந்து என்ற சொல்லின் கவர்ச்சியால்
இன உணர்வு மறந்தவர்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக எதிரியின் சுயரூபத்தை
அறியாதவர்கள் உணராதவர்கள் தெரிந்தே தவறான இடத்தில் இருப்போரும்
தெரியாமல் அங்கே இருப்போரும் இப்போது மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கொஞ்சம் அகங்காரம் தலையில் ஏறியிருக்கலாம் அன்புச்சோதரி தமிழிசை உடனே புகாரை திரும்பப் பெற்று தமிழர்கள் ஒருவர்க்கொருவர்
விட்டுக் கொடுத்துக் கொள்வார்கள் என்று நிரூபி.

ஏதோ இயக்கம் பின்புலத்தில் இருப்பதாக தமிழிசை
சந்தேகிப்பதில் உண்மை இருந்தால் காவல் துறை
விசாரிக்கட்டும்- ஆனால் பா ஜ க தலித்துகளை
அடக்கி வைத்துக் கொண்டே பல கட்சிகளில்
இருந்து அவர்களை வளைக்க முயற்சிப்பது
உண்மைதானே?? அடக்குவது நாங்கள் அல்ல
இதர பிற்பட்டோரே என்று பார்ப்பனர்கள்
பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் இந்த சாதி முறையை உருவாக்கி
எல்லாரையும் பிரித்து வைத்திருப்பது யார்?
தான் மட்டும் மேலே அமர்ந்து கொள்கிறேன்
கீழே இருக்கும் மூவரும் எப்படி வேண்டுமானாலும்
அடித்துக் கொள்ளுங்கள் – இதுதானே சூத்திரம்
பிரச்னை பெரிதாகக் கூடாது
அதற்கு ஒரே வழி தமிழிசை சோபியா மீதான
புகாரை திரும்பப் பெறுவதுதான்??!!
நானும் சொல்கிறேன் ‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக’
என்று திமுக தலைவர் ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார்.
எத்தனை லட்சம் பேர் மீது வழக்குப் போடுவீர்கள்??

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top