மதம்

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம் ?!

Share

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கோவில் நகைகள் திருடு போவது வழக்கமாகிவிட்டது.

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் இருப்பது. பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்து தான் தினமும் இரவில் நகைகள் பாதுகாக்கப் படும். அப்படி பார்க்கும்போது மூன்று தங்க கிரீடங்கள் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. மூன்று அர்ச்சகர்கள் இருந்திருக்கின்றனர்.  கண்காணிப்பு காமிராக்கள் பழுதடைந்து இருக்கின்றன.

வெளி ஆட்கள் இந்த திருட்டை செய்திருக்க முடியாது என்று காவல்துறை கருதுகிறது.

களவு போன நகைகளின் மதிப்பு பல கோடி பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

என்ன செய்வது? களவு செய்தவர்கள் பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கு சாமி பற்றிய பயமே இல்லை என்றாகிறது.

குற்றம் செய்தவன் கள்வன். பழி சுமப்பது சாமியா?

நகைகளால் சாமிக்கு மகிமையா? சாமியால் நகைகளுக்கு மகிமையா?

ஆண்டிற்கு ஒருமுறை  மட்டுமே சுவாமிக்கு நகைகள் அணிவிப்பது என்று ஒரு புதிய சம்பிரதாயம் உருவாக்கினால் என்ன?

கோவில்கள் பக்தி செய்ய  மட்டும் என்று உருவானால் தான் இத்தகைய குற்றங்கள் குறையும்.

This website uses cookies.