Connect with us

221 கிலோ பழனி தண்டாயுதபாணி சிலை கும்பகோணம் நீதிமன்றம் சென்றது??!!

தமிழக அரசியல்

221 கிலோ பழனி தண்டாயுதபாணி சிலை கும்பகோணம் நீதிமன்றம் சென்றது??!!

சித்தர் போகரால் உருவாக்கப் பட்ட நவ பாஷாண அருள்மிகு தண்டாயுதபாணி  மூலவர் சிலை தொடர் பூசையால் பாதிக்கப் பட்டதால் 221 கிலோ எடையில் உத்சவர் சிலை உருவாக்கப்பட்டது.

அதில் போதிய தங்கம் சேர்க்காமல் மோசடி செய்ததாக சிலையை உருவாக்கிய ஸ்தபதி முத்தையா, முன்னாள் நிர்வாக அதிகாரி கே கே ராஜா , மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் மற்றும் பலர்  கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணை அதிகாரி ஐ ஜி பொன் மாணிக்க வேலை மாறுதல் செய்ய முயற்சிகள் நடைபெற்று அது நீதிமன்ற குறுக்கீட்டால் முறியடிக்கப் பட்டது.   அவர் நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற இருப்பதற்காக காத்திருக்கிறார்களாம் .

இந்து அற நிலையத்துறை ஆணையர் ஆக இருந்த தனபால் மீது குற்றம் சாட்டப் பட்டு விசாரணை வளையத்தில் இருக்கிறார் என்பதும் அவர் நீதி மன்ற பிணையில் இருக்கிறார் என்பதும் வேதனையான செய்திகள்.     வேலியே பயிரை மேய்ந்தால் காப்பது யார்?

நீதிமன்றத்தில் ஒப்படைக்க இந்த சிலை கீழே இறக்கப் பட்டு நீதிபதியால் சிலை எடை போடப்பட்டு பின் பாதுகாப்பாக வைப்பதற்கு கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வைப்பறைக்கு கொண்டு செல்லப் பட்டது.

இப்படி சாமி சிலைகளில் மோசடி செய்பவர்கள் எப்படிப்  பட்ட பக்தர்களாக இருப்பார்கள்?

அவர்களை எப்படி பக்தர்கள் என்று ஏற்றுக் கொள்வது?

பக்தர்களின் நம்பிக்கையை வைத்து எப்படியெல்லாம் விளையாடுகிறார்கள்?

முருகனுக்கு அரோகரா!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top