இந்திய அரசியல்

பா ஜ க எம் எல் ஏ கணேஷ் ஜோஷி தாக்கிய சக்திமான் குதிரை இறந்தது?!!

Share

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது காவல் துறையுடன் ஏற்பட்ட மோதலில் பா ஜ க எம் எல் ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் என்ற குதிரையை சரமாரியாக தாக்கினார்.

அவர் தாக்கிய படம் பத்திரிகைகளில் வெளி வந்தது.     அந்த குதிரையின் கால் உடைந்து அதற்கு செயற்கை கால் பொருத்தப் பட்டு சிகிச்சை பெற்று வந்தது.     செய்தி படித்த ஒரு அமெரிக்கர் தன் சொந்த செலவில் ஒரு செயற்கை காலை தயார் செய்து கொண்டு வந்து தானே நெறி வந்து கொடுத்து விட்டுப் போனார்.    அது மானுடம் .

துரதிர்ஷ்ட வசமாக சிகிச்சை பலனின்றி அந்த குதிரை இறந்து போனது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

ஜோஷி மீது வழக்கு பதிவு செய்து  கைது  செய்யப் பட்டு பிணையில் இருக்கிறார்.

அவர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் அவருக்கான தண்டனையை அவரே விதித்துக் கொள்ள வேண்டும்.    இல்லையேல் சட்டம் அவரது பதவியை பறிக்க வேண்டும்.

பொதுவாழ்வில் தொடர உரிமை இல்லாதவர் தானே விலகா விட்டால் சட்டம் அவரை விலக்க வேண்டும்.

This website uses cookies.