Connect with us

நிர்மலாவிடம் அவமானப் பட்டு திரும்பிய ஓ பி எஸ் ?!

Latest News

நிர்மலாவிடம் அவமானப் பட்டு திரும்பிய ஓ பி எஸ் ?!

தமிழகத்தின்  துணை முதல்வர்  ஓ பி எஸ் – நேரம் கொடுக்கப்படாமல்

சந்திக்க சென்றதாகவே இருக்கட்டும்

அறை வாசல்  வரை அனுமதித்து காக்க வைத்துவிட்டு

நேரத்தில் மைத்ரேயனை மட்டும் உள்ளே  அழைத்துக் கொண்டு

ஓ பி எஸ் ஐ சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பினாரே நிர்மலா

என்ன காரணமாக இருக்கும்?

மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியாமலா இது  நடக்கும்?

நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில்

கேட்காமலேயே ஆதரித்து வாக்களித்ததற்கு இப்படியா தண்டிப்பது?

தனிப்பட்ட முறையில் ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து சகோதரருக்கு

உதவிதற்கு  நன்றி சொல்ல என்று உண்மையை உடைத்து விட்டாரே

என்ற கோபமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏன் சி பி ஐ விசாரணைக்கு

உத்தரவிடக் கூடாது  என்று உயர் நீதி மன்றம் கேள்வி கேட்ட

நிலையில் ஏன் நமக்கு இந்த ஆள் சகவாசம் என்ற அச்சமா?

மோடி சொன்னதால் இணைந்தேன் என்று மார் தட்டியவருக்கு

ஏன் இந்த சோதனை?

கே பி  முனுசாமி மனோஜ்  பாண்டியன் மைத்ரேயன் என்று

தன் அணியை மட்டும் கூட்டிச் சென்றது அவர்களுக்கு பிடிக்கவில்லையா?

துணை முதல்வரை பார்க்க விருப்பமில்லை

எம் பி சத்யபாமா அன்றே பார்க்கிறார்  நிர்மலாவை .

நாளை தங்கமணியும் வேலுமணியும் பியுஷ் கோயலை பார்க்கிறார்கள்

இது என்ன புதுவித கண்ணாமூச்சி விளையாட்டு

புலம்ப வைத்து  விட்டாரே நிர்மலா

விமான நிலையத்தில் சொன்னாரே ஓ பி எஸ் அண்ணா சொன்னதை

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று

அது இப்படி அவமானப் படுத்தப் பட்டதற்கா சொன்னார் ?

கொள்கைப்போரில் எதிர்கொள்ளும் தோல்விகளுக்கு

சொன்னதை  இப்படி கொள்ளையடித்து தப்பிக்க  முயலும்போது

எதிர்கொள்ளும் அவமானங்களையும் சேர்க்கலாமா ?

இனி ஓரங்கட்டப் படுவார் ஓ பி எஸ் என்பது

நிதர்சனமாகி விட்டது.   ஓரங்கட்டுவது இ பி எஸ் ஆ

மத்திய அரசும் சேர்ந்தா என்பது விரைவில்

வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

இன்னும்  வண்ண வண்ண வேடிக்கை காட்சிகள்

அ தி முகவில் அரங்கேறும் என்பது மட்டும் நிச்சயம்.

எப்படி அடித்தாலும் அழ மாட்டோம் என்று

அடிமை சேவகம் செய்தோருக்கு இதுதான் பரிசு

என்றாலும்

ஒரு தமிழ் நாட்டு துணை முதல்வருக்கு  இழைக்கப் பட்ட

அவமானம் கொஞ்சம் சுடத்தான் செய்கிறது.

சூழ்ச்சி வலை விரிக்கும் பா ஜ க தமிழ் சமுதாயத்தின்

மீது தொடுக்கப் போகும் அடுத்த காட்ட தாக்குதல்

என்ன யார்  யாரெல்லாம் கோடரிக்காம்புகள்

ஆக்கப்  படுவார்கள்?

சகிக்க முடியாதது ; அமைச்சர் ஓ பி  எஸ் ஐ சந்திக்கவில்லை’

என டிவிட்டர் போட்டதுதான்

இ பி எஸ் வாய் திறக்க வில்லையே

மெளனமாக மகிழ்கிறாரா?

தேர்தல் நெருங்க நெருங்க

அடிமைகளுக்கு சோதனைகள் தான் !!!

 

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top