Connect with us

ஒபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுத்த இபிஎஸ் ??!!

ops-ravindranath

தமிழக அரசியல்

ஒபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுத்த இபிஎஸ் ??!!

மோதல் தொடங்கிவிட்டது. இது எதில் கொண்டு போய்விடும் என்பதை குறுகிய காலத்திலேயே காணலாம்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும் அன்று மதியம் அமைச்சராகும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றது. அந்த அழைப்பு ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் சென்றது என்பதை ஆங்கில ஊடகங்கள் செய்தியாக வெளியிட ஆரம்பித்தன.

ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கு அழைப்பு செல்லவில்லை என்றதும் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் கட்சி துண்டு துண்டாக சிதறிவிடும் என்று வைத்திலிங்கம் எச்சரித்ததாக செய்திகள் வெளியாயின.

சீனியர்கள் பலர் ராஜ்ய சபாவில் உறுப்பினர்களாக இருக்கையில் நேற்று எம்பி ஆன ரவீந்திர நாத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை கட்சியில் எதிர்க்க ஆரம்பித்தனர்.

இபிஎஸ் தன் சகாக்கள் உடன் டெல்லி பயணமானார். எவர் முகத்திலும் சிரிப்பில்லை.

மோடிக்கு பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பு நடந்து கொண்டிருந்தபோது ரவீந்திரநாத் அழைக்கப்படும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. காரணம் முதல்வர் இபிஎஸ் கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள் இல்லாவிட்டால் ஒருவருக்கும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார் என்பதுதான். பாஜகவும் உறுதியாக ஒருவருக்குத்தான் அமைச்சர் பொறுப்பு அவர் யார் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என்றபோது இபிஎஸ் உறுதியாக ஒருவருக்கு மட்டும் என்றால் வேண்டாம் என்று சொன்னாராம்.  முடிந்தது ஒபிஎஸ்சின் கனவு. நூறு கோடி செலவு செய்து வெற்றி பெற்று மோடியிடம் அமைச்சர் பொறுப்புக்கு வாரனாசி சென்று வேண்டுகோள் வைத்தது எல்லாம்  வீணாயிற்று.

எல்லா சீனியர் அமைச்சர்களும் ஒபிஎஸ் மகனுக்கு எதிராக இருந்ததுதான் வேடிக்கை.

எல்லாரும் சென்னை திரும்பி விட இவர் மட்டும் டெல்லியில் தங்கி தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இனி அடுத்த விரிவாக்கம் எப்போது நடந்தாலும் ரவீந்திரநாத் சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம் என்றாலும் அதன் தாக்கம் கட்சியில் நிச்சயம் வெடிக்கும் என்பதும் உறுதியானது.

எப்படியோ இவர்கள் சண்டையில் ஒரு அமைச்சரையாவது பெரும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top