Connect with us

காவிரி- இறுதித் தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா!! மௌனம் சாதிக்கும் மத்திய மாநில அரசுகள்!!! வஞ்சிக்கப் படும் டெல்டா விவசாயிகள்!!!!!

Latest News

காவிரி- இறுதித் தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா!! மௌனம் சாதிக்கும் மத்திய மாநில அரசுகள்!!! வஞ்சிக்கப் படும் டெல்டா விவசாயிகள்!!!!!

              காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து அதை அமுல் படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதால் தைரியம் கொண்ட கர்நாடகா அரசு மேகதாது என்ற இடத்தில அணைகள் கட்ட போவதாகவும் அதற்கு உலகளாவிய டெண்டர் விடப்போவதாகவும் அறிவித்து இருக்கிறது.

              அங்கே காங்கிரெஸ் -பா.ஜ.க.என்றெல்லாம் பாகுபாடு பாராமல் அது எங்களது உரிமை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

              இங்கோ தமிழக அரசு ஏதும் செய்ய முன்வராத நிலையில் விவசாயிகள் ஒன்று திரண்டு மேகதாதுவை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து இரண்டாயிரம் பேர் கர்நாடகாவுக்குள்  நுழைய முயன்று கைதாகி விடுதலை யாகி உள்ளனர். 
              தேசிய கட்சிகளான காங்கிரசும் பா.சக வும் அங்கொரு நிலையம் இங்கொரு நிலையும் எடுக்கிறார்கள். 
               இங்கோ தலை இல்லாத விசித்திரமான  ஆட்சி நடந்து வருகிறது. 
               மத்திய அரசு அரசியல் காரணமாக தலையிட தயாராக இருக்காது.    மத்திய அரசு நியாயமாக நடந்து கொண்டால் உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விட்டால் அதை மீறி செயல் பட முடியாமல் கர்நாடகம் தடுக்கப் படும்.     மோடி அரசு அதற்கு தயாராக இல்லையே !
               உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை மாநில அரசு தட்ட வில்லை என்றால் விவசாயிகள் கூட்டமைப்பு அந்த முயற்சியில் இறங்க வேண்டும். .   அப்போதாவது மாநில அரசு உணர்வு பெறுகிறதா என்பதை பார்க்கலாம்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top