பொழுதுபோக்கு

ராகவா லாரன்ஸ் அமெரிக்காவில் பிறந்தவரா?! அவரே எழுப்பிய கேள்வி?

Share

ராகவா லாரன்ஸ் அமெரிக்காவில் பிறந்தவரா?! அவரே எழுப்பிய கேள்வி?

ரஜினி பிறந்த நாள் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் சீமானை தாக்குவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.

அதில் நாங்கதான் இங்கே பிறந்தோம் என்று பேசுகிறீர்களே நாங்கள் எல்லாம் அமெரிக்காவிலா பிறந்தோம் என்று ஒரு கேள்வியை அவரே எழுப்பினார். அதை அவர்தான் விளக்க வேண்டும்.

லாரன்ஸ் பேச்சில் ரஜினியின் மேல் இருக்கும் விசுவாசம் தெரிந்ததே தவிர முதிர்ச்சி தெரியவில்லை.

அரசியலுக்கு வராதே என்று ரஜினியை பார்த்து யார் சொன்னார்கள்? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் உன் கொள்கை என்ன என்று சொல் என்றுதானே கேட்கிறார்கள். சொல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்படி?  

அரசியலுக்கு வருவதற்குக் உனக்கு உரிமை இருக்கும்போது கொள்கை சொல்லாமல் வந்தால் உன்னை தோற்கடிப்போம் என்று சொல்ல மற்றவர்களுக்கு உரிமை இல்லையா?

ஓட்டப்பந்தயத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உண்மைதான்.   வெற்றி பெற்றால் கோப்பையை பெற்றுக் கொள். ஆனால் யாரும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காக ஆட்சியை கையில் கொடுத்து விட மாட்டார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்று விட்டாய். கோடிகளை குவித்துக் கொண்டாய், போதாது.  ஆட்சியை தூக்கி என் தலையில் வை என்றால் எப்படி?

எம்ஜியாரோடும் ஜெயலலிதாவோடும் ரஜினியை ஒப்பிடுவதே தவறு.

லாரன்ஸ் சீமான் அண்ணா என்று பேசியபோது ரசிகர்கள் பேரை சொல்லாதே என்று கூச்சல் இட்டார்கள்.

ரஜினி வருவது உறுதி என்றும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம் என்றும் அவரது அண்ணன் சொல்கிறார்.

மற்றவர்கள் சொல்ல வேண்டியதை குடும்பம் சொன்னால் சரியா?

ராகவா லாரன்ஸ் தனது கொடை வழங்கும் உள்ளத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர். எதிரிகள் இல்லாத நல்ல கலைஞன். அதனால் சொல்கிறோம்.

ராகவா லாரன்ஸ் கொஞ்சம் அடக்கி வாசிப்பா?

This website uses cookies.