பொழுதுபோக்கு

அழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா?!

Share

கௌரவக் கொலைகள் நடப்பது உண்மை. அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பொழுதுபோக்காக ஒரு அழுத்தமான செய்தியை உரக்க சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி.

அதுதான் சாதியற்ற மதமற்ற சமுதாயம் படைப்போம் என்ற செய்தி.

தமிழர் என்ற போர்வையில் ஒன்றிணைவதை தடுப்பது சாதி. சாதியின் மூலம் எவரும் கண்டிராத காரணம். மூவேந்தர் காலத்தில் இன்று இருக்கும் சாதிகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை.

பல்வேறு தொழில் கள் செய்பவர்கள் இருந்திருக்கிறார்களே தவிர அவர்கள்  இன்றைய சாதி பெயர்களை கொண்டிருக்க வில்லை.

எந்தக்  கோணத்தில் பார்த்தாலும் சாதியை தூக்கி வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில் தமிழகம் இல்லை.

நாட்டிலேயே சாதிப் பெயர்களை ஒழித்து அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை தமிழ் நாட்டில் தான் இருக்கிறது.

ஆனால் நல்ல படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பார்க்கலாம். நல்ல செய்தியை சொன்ன சமுத்திரகனி – சசிகுமார் கூட்டணி வெற்றி பெறுகிறதா என்பதை.

This website uses cookies.