பொழுதுபோக்கு

பாரம், கே டி கருப்புதுரை, திரௌபதி போன்ற படங்கள் நிறைய வர வேண்டும்!

Share

சினிமாக்கள் வெறும் பொழுது போக்குக்குத் தானா  ?

பொழுதும் போக வேண்டும். பொருளும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த பாரம், கே டி கருப்புதுரை, திரௌபதி, நேர்கொண்ட பார்வை , பரி ஏறும் பெருமாள் போன்ற  படங்கள் சமுதாய பிரச்னைகள் பற்றி பேசின.

அஜீத் என்ற கதாநாயகன் இருந்ததால் நேர் கொண்ட பார்வை வெற்றி  பெற்றது. பெண்ணின் விருப்பம் இல்லாமல் நடைபெறும் எந்த உறவும் குற்றமே என்பதை அழுத்தமாக சொன்னது அஜீத்  படம். திரௌபதி  சர்ச்சையும் சாதியும் கலந்ததால் வெற்றி பெற்றது. தலித்தியம் பேசியதால் பரி ஏறும் பெருமாள் வெற்றிபெற்றது.

ஆனால் வயதான பெற்றோரை கருணை கொலை செய்யும் சமுதாய  பிரச்னையை  பேசிய கருப்புத்துரையும் பாரமும் அந்த அளவு  பேசப் பட வில்லை.  ஆனாலும் பாராட்டுதல்களை பெற்றது. ஒருவேளை கதாநாயகன் பிரபலம்  இல்லை.

தென் மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை மட்டுமல்ல வயதானோர் கருணைக் கொலையும்  கண்டு கொள்ளப் படாத நிதர்சனங்கள் .

அதையும் விஞ்ஞான பூர்வமாக செய்கிறார்கள். எண்ணைக்குளியலை தொடர்ந்து இளநீர்களை குடிக்க வைத்தால்  ஜன்னி கண்டு இறந்து விடுவார்கள் .

இன்னும் முடியாமல் போனால் ஊசி  போட்டு முடிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சமூக அவலம்.

முற்காலத்தில் முதுமக்கள் தாழி என்ற முறை  இருந்திருக்கிறது.சுட்ட களிமண் பானையில்  முதுமக்களை வைத்து  கீழே இறக்கி விடுவார்களாம்.

எப்படியோ சமுதாய பிரச்னைகளை ஜன ரஞ்சகமாக சொல்லியாவது வெற்றிப் படங்களாக தமிழ்  சினிமா தரும் என்று  எதிர்பார்ப்போமாக,

This website uses cookies.